ஆடம்பர கார் பரிசு... மகளின் பிறந்தநாளில் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சஞ்சீவ்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

 

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா இருப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து ஆல்யா - சஞ்சீவ் ஜோடிக்கு
'ஐலா சையத்' என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது ஐலா பாப்பாவின் பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடினர். பின்னர் தற்போது மனைவி ஆல்யா மானசாவுக்கு ஆடம்பர கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

 

View this post on Instagram

A post shared by alya_manasa (@alya_manasa)

LATEST News

Trending News