தோழிக்கு சக்களாத்தி, தம்பி பொண்டாட்டிக்கு வில்லி.. நடிகை ஹன்சிகா அதிரடி கைது? பரபரப்பு தகவல்கள்!

தோழிக்கு சக்களாத்தி, தம்பி பொண்டாட்டிக்கு வில்லி.. நடிகை ஹன்சிகா அதிரடி கைது? பரபரப்பு தகவல்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் ஹன்சிகா மோத்வானி, தனது சகோதரர் பிரசாந்த் மனைவி நான்சி ஜேம்ஸ் (முஸ்கான் நான்சி) மீது வரதட்சணை கோரி கொடுமைப்படுத்தியதாக வழக்கு பதிவானது.

இதற்கு எதிராக ஹன்சிகா மற்றும் அவரது தாய் ஜோதிகா (மோனா) மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று (செப்டம்பர் 12, 2025) அந்த மனு தள்ளுபடியானதால், போலீசார் ஹன்சிகா மீது விசாரணை நடத்த அனுமதி பெற்றுள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு 2021-ல் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி, டிவி நடிகை நான்சி ஜேம்ஸை காதல் திருமணம் செய்ததோடு தொடங்குகிறது. ஒரே ஆண்டிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 2024-ல் அம்போலி போலீஸ் நிலையத்தில் நான்சி புகார் அளித்தார்.

ஹன்சிகா, அவரது தாய் மோனா மற்றும் கணவர் பிரசாந்த் ஆகியோர் தன்னிடம் பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுகள் கோரியதாகவும், வரதட்சணை காரணமாக கொடுமைப்படுத்தியதாகவும் நான்சி கூறினார். இதனால் தனக்கு உணர்ச்சி ரீதியான பாதிப்பு ஏற்பட்டு, பெல்ல்ஸ் பால்சி (முகப் பக்கவாது) போன்ற உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இதுபோல், தனது சொந்த அடையாளம் உள்ள குடியிருப்பை விற்க வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.புகாரின்படி, BNS சட்டத்தின் 498ஏ (வரதட்சணை தொடர்பான கொடுமை), 323 (உச்சத்திரட்டல் ஏற்படுத்துதல்), 352 (கிரிமினல் அச்சுறுத்தல் மற்றும் அவமானம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஹன்சிகா தரப்பில், இது தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாக உருவானதாகவும், திருமணச் செலவுகளுக்காக அளித்த 27 லட்ச ரூபாய் கடன் திரும்பக் கோரியதால் இந்தப் புகார் வந்ததாகவும் வாதிடப்பட்டது. இருப்பினும், உயர் நீதிமன்றம் மனுவை நிராகரித்து, விசாரணை தொடர அனுமதி அளித்துள்ளது.இதற்கிடையில், ஹன்சிகாவின் திருமண வாழ்க்கையிலும் பிரச்சினைகள் நீடிக்கின்றன.

2022 டிசம்பரில் தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை (சோஹெல் கதூரியா) காதல் திருமணம் செய்த ஹன்சிகா, கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது தனது தாயுடன் தங்கியுள்ளார். சோஹைல் தனது பெற்றோருடன் இருப்பதாகவும், ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராமில் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

விவாகரத்து பேச்சுகள் நடக்கிறதாகவும், சோஹைல் இதை மறுத்திருந்தாலும், சமூக வலைதளங்களில் டிராமா பரவியுள்ளது. ஹன்சிகாவின் முந்தைய உறவுக்கு தொடர்புடைய சர்ச்சைகளும் (சோஹைலின் முதல் மனைவி ரிங்கி பாஜாஜ்) ஹன்சிகாவின் நெருங்கிய தோழி ஆவார். அப்போது, தோழிக்கு சக்காளத்தி.. இப்போது தம்பி பொண்டாட்டிக்கு வில்லி.. விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது ஹன்சிகாவின் நடவடிக்கைகள்.

இந்த சம்பவம், ஹன்சிகாவின் திரை வாழ்க்கையைப் பாதிக்கலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதால், அடுத்த நிலைகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News