3வது திருமணமும் விவாகரத்தில் முடிந்ததாக அறிவித்த நடிகை... யாரு பாருங்க
தன்மத்ரா படத்தின் மூலம் மலையாள சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் மீரா வாசுதேவன்.
பின் கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, ஏசியாநெட்டில் ஒளிபரப்பான குடும்ப விளக்கு என்ற சீரியல் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அந்த சீரியலும் மீராவிற்கு பெரிய ரீச் கொடுத்தது, எனவே வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி படங்கள் அதிகம் நடிப்பார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை, வேறொன்று தான் நடந்தது.
கடந்த 2005ம் ஆண்டு விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்தார், ஆனால் 2008ம் ஆண்டு பிரிந்தார்.
பின்னர் நடிகர் ஜான் கொக்கேனை 2012ம் ஆண்டு திருமணம் செய்து அவரை 2016ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் சீரியல் ஒளிப்பதிவாளர் விபினை 3வது திருமணம் செய்தார்.

கடந்த 2023ம் ஆண்டு விபின் உடன் திருமணம் செய்த மீரா வாசுதேவன் இப்போது அந்த திருமணமும் முடிவுக்கு வந்துவிட்டதாக பதிவு செய்துள்ளார். நான் நடிகை மீரா வாசுதேவன்.
2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். என் வாழ்க்கையின் மிக அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் நான் இருக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.
