“அயோக்கிய பெண்” என் பையனை கெடுத்ததே இவ தான்! இதனால் தான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்! சீரிய சிவக்குமார்!

“அயோக்கிய பெண்” என் பையனை கெடுத்ததே இவ தான்! இதனால் தான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்! சீரிய சிவக்குமார்!

நடிகர் சிவகுமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றபோது, அவர்களது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதியரின் காதல் மற்றும் திருமணம் குறித்த சுவாரசியமான நினைவுக் கதைகளை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

நேர்காணலில் ராதிகா பேசுகையில், சூர்யா 'உயிரிலே கலந்தது' திரைப்படத்தில் ஜோதிகாவுடன் நடித்தபோது மிகவும் வெட்கப்பட்டு, யாருடனும் பேசாமல் இருந்ததாகக் குறிப்பிட்டார். "நான்தான் சூர்யாவிடம் 'இப்படி இருக்கக்கூடாது, நல்லா சிரிச்சு பேசு. ஹீரோயின் ஜோதிகா கிட்ட நல்லா பேசு' என்று சொன்னேன்" என சிரித்தபடி கூறினார்.

அப்போது சிவகுமார் உடனடியாக, "அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்ச அயோக்கிய பெண் இவங்கதாங்க. சூர்யா சிவனேன்னு இருந்திருப்பான். பேசு பேசுன்னு ஊசிப்பேத்திவிட்டு என் பையனை கெடுத்ததே இவ தான்" என்று கிண்டலாகக் கூற, அரங்கமே சிரிப்பில் மூழ்கியது.

மேலும், சூர்யாவின் திரை வாழ்க்கையில் அவர் கதாநாயகிகளுடன் நெருக்கமான காட்சிகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, "நான் எத்தனை ஹீரோயின் மீது ரோல் ஆனேன் என்று எனக்கே தெரியாது. அந்த அயோக்கியத்தனத்தை எல்லாம் நான்தான் பண்ணிருக்கேன்" என்று சிவகுமார் தன்னை நகைச்சுவையாக விமர்சித்து, மகனை பாராட்டினார்.

ராதிகா தொடர்ந்து பேசுகையில், தான் 'சித்தி' சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் தீவிர காதலில் இருந்ததாகவும், சிவகுமார் ஸ்ட்ரிக்ட்டாக எதிர்த்தாலும், தான் சூர்யாவுக்கு ஆதரவாக இருந்ததாகவும் கூறினார்.

"சூர்யா எனக்கு போன் செய்து 'அக்கா அப்பா என்ன சொல்றாங்க'னு கேப்பார். 'அவர்தான் பாட்டு பாடிட்டே இருக்காரே'னு நான் சொல்வேன்" என்றும், சூர்யா தனது காதலில் விடாப்பிடியாக இருந்ததாகவும் ராதிகா தெரிவித்தார்.

சிவகுமார் பேசுகையில், "என் மகன் நான்கு வருடங்களாக ஜோதிகாவை காதலித்தான். நான் 150 படங்களில் காதலித்து திருமணம் செய்வது போல நடித்திருக்கேன்.

அப்போதெல்லாம் 'உங்க சொத்தை நம்பி நான் கல்யாணம் பண்ணல, உங்க உழைப்பை நம்பித்தான்'னு டயலாக் பேசியவன். எப்படி ஒரு பெண்ணை கல்யாணம் பண்றப்போ வேண்டாம்னு சொல்ல முடியும்? அதனால அமைதி ஆயிட்டேன்" என்றார். மனைவி ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை என்றாலும் பின்னர் மனம் மாறியதாகவும் கூறினார்.

மேலும், சூர்யா திருமணம் என்றால் ஜோதிகாவுடன் மட்டும்தான் என்று உறுதியாக நின்றதால், "இது உண்மையான கேஸ்தான் போல" என நினைத்து சல்யூட் அடித்து சம்மதம் தெரிவித்ததாக சிவகுமார் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

இந்த நேர்காணலில் வெளிப்பட்ட தந்தை-மகன் உறவு, காதல் பிடிவாதம், குடும்ப ஆதரவு ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. சூர்யா-ஜோதிகா ஜோடியின் காதல் கதை மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.

LATEST News

Trending News