அம்மா, அப்பா வந்து வா என்றதும் நிலா என்ற அதிரடி முடிவு, ஷாக்கில் சோழன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட்

அம்மா, அப்பா வந்து வா என்றதும் நிலா என்ற அதிரடி முடிவு, ஷாக்கில் சோழன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட்

அய்யனார் துணை

போலீஸ் நிலையத்தில் அந்த சூழலை பயன்படுத்தி சோழன் தன்னை திருமணம் செய்தார் என்பதை அறிந்து நிலா மிகவும் கோபப்பட்டு விவாகரத்து கேட்டுவிட்டார்.

பின் இந்த வீட்டிலேயே இருக்க மாட்டேன் என அவர் தனது தோழியுடன் தங்க சென்றுவிட்டார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த அனைவரும் தன்னை திட்டியதால் சோழனும் வீட்டைவிட்டு வெளியே செல்ல விபத்து ஏற்பட்டதாக ஒரு நாடகம் போட்டார்.

இதனைக் கேட்டு பதறி மருத்துவமனை வந்த நிலா சோழனுக்கு ஒரு 6 மாதம் அவகாசம் கொடுத்தார். இந்த 6 மாதத்தில் சோழன் நிலாவிற்கு ஏற்றவாரு மாற வேண்டும். 

அம்மா, அப்பா வந்து வா என்றதும் நிலா என்ற அதிரடி முடிவு, ஷாக்கில் சோழன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் | Ayyanar Thunai Serial May 21 Episode

எபிசோட்

தற்போது நிலாவிற்கு சோழனுடன் விவாகரத்து ஏற்பட்டதை அறிந்துகொண்ட நிலாவின் அம்மா அப்பா சோழன் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது நிலா அழைத்துக்கொண்டு தனியாக கோவிலுக்கு செல்கிறார்கள்.

அங்கு நிலாவிடம் அவரது அப்பா, உனக்கு தான் விவாகரத்து ஆகிவிட்டது அதன்பிறகு நீ ஏன் இங்கே இருக்க வேண்டும், நம் வீட்டிற்கு வா என்கின்றனர். ஆனால் நிலாவோ விவாகரத்து ஆனால் என்ன நான் வரவில்லை என இன்றைய எபிசோடில் கூறுகிறார்.

வீட்டில் சோழன், நிலாவை அவர்களது அம்மா-அப்பா அப்படியே ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுவார்களோ என்ற பயத்திலேயே இருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES