என் தம்பி.. முதமைச்சராக பார்க்கும்போது.. எமோஷ்னலாக பேசிய நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு படங்களில் நடிப்பதை தாண்டி அரசியலில் தான் கடந்த பல வருடங்களாக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அவர் விஜய்யை தம்பி என்று தான் தொடர்ந்து கூறி வந்தார்.
குஷ்புவின் கணவர் இயக்குனர் சுந்தர்.சி தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அவர் பிரச்சாரம் செய்தபோது கூட விஜய்யை தான் விமர்சிக்கமாட்டேன் என வெளிப்படையாகவே கூறி இருந்தார்.
எமோஷ்னல்..
முதலமைச்சராக பதவியேற்ற விஜய்யை தற்போது குஷ்பு சந்தித்து இருக்கிறார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்கிற முறையில் அவர் விஜய்யை சந்தித்து கோரிக்கைகள் பற்றி பேசி இருக்கிறார்.
அது பற்றி பதிவிட்டு இருக்கும் குஷ்பு "என் தம்பியை முதலமைச்சர் நாற்காலியில் பார்த்தது மிகவும் எமோஷ்னலாக தருணமாக இருந்தது. பரஸ்பர அன்பு மற்றும் மரியாதை எப்போதும் இருக்கும்" என கூறியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “அவர் என்னை கட்டிப்பிடித்து, திதி (அக்கா) என சொன்னது எமோஷ்னலாக இருந்தது” என கூறியுள்ளார்.