போலீஸ் வரும்போது என்ன செய்வது.. கலக்கத்தில் ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ
வீட்டில் மற்ற பெண்கள் எல்லோரும் வேறு மனநிலைக்கு மாறிவிட்ட நிலையில் ஜனனி மட்டும் தான் குணசேகரனுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்.
அவளை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என ரேணுகாவை விமர்சிக்கிறார் விசாலாட்சி. இன்றய எபிசோடு ப்ரோமோவில் அது காட்டப்பட்டுள்ளது.
என்ன பண்றது?
நாளைக்கு போலீஸ் வரும்போது என்ன பண்றது மேடம் என கடும் ஷாக் உடன் போனில் பேசுகிறார் ஜனனி. அதன் பிறகு சக்தி உடன் பேசி ஒரு திட்டத்தை போடுகிறார்கள்.
'என்ன தாண்டா பண்ண போறீங்க' என கதிர் நக்கலாக அவர்களை பேசுகிறார். 'நாங்க எதுவும் பண்ண மாட்டோம், கோர்ட் பண்ணும்' என சக்தி பதிலடி கொடுக்கிறார்.
ப்ரோமோவை பாருங்க.