பிக்பாஸ் அபிஷேக் ராஜாவின் முன்னள் மனைவியின் அதிர்ச்சி அறிவிப்பு!

பிக்பாஸ் அபிஷேக் ராஜாவின் முன்னள் மனைவியின் அதிர்ச்சி அறிவிப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் ராஜா, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பின்னரும் தன்னுடைய விமர்சனத்தை தொடர்ந்து செய்து வருகிறார் என்பது நேற்றைய எபிசோடு பார்த்தவர்கள் தெரிந்திருக்கும். முகத்தை பார்த்து ஜோசியம் சொல்கிறேன் என்று ஒவ்வொருவரின் முகத்தை பார்த்து அவர்களுடைய கேரக்டரை சொல்லி வருகிறார் என்பதும், அதையும் அவர்கள் சீரியஸாக கேட்டு வருவதால் மிகப் பெரிய காமெடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனை அடுத்து திடீரென எல்லோருடைய பார்வையும் தன் மீது படவேண்டும் என்பதற்காக அம்மா சென்டிமென்ட் கதையை எடுத்து விட்டார் என்பதையும் கிட்டத்தட்ட அனைவரும் சீரியசாக கேட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் அபிஷேக் ராஜாவுக்கு திருமணம் நடந்து ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய முன்னாள் மனைவி தீபா நடராஜன் அவர்கள் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நமக்கு ஒரு துக்கமான சம்பவம் நடந்தால் அதில் இருந்து நம்மை நாமே வெளியே கொண்டு வருவது எவ்வளவு கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்படி இருந்தும் ஒரு சிலர் நம்மை வேண்டும் என்றே நம்முடைய கடந்த காலத்தில் ஒரு பகுதியை தூண்டி விடுவதால் நம்முடைய ஒரு நாள் அல்லது ஒரு வாரம் சோகமயமாகி விடுகிறது.

நான் என்னுடைய திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து வாங்க வேண்டும் என்பதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நான் முடிவு செய்து விட்டேன். இந்த முடிவை நான் என்னுடைய சுய சிந்தனையுடன் எடுத்தேன். இதன்பிறகு என்னென்ன பிரச்சனை வரும் என்பதை யோசித்து, அதை எப்படி எதிர் கொள்ளலாம் என்பதையும் நான் முடிவு செய்துதான் விவாகரத்து என்ற முடிவை எடுத்தேன். மேலும் இது என்னுடைய சொந்த முடிவும் கூட..

திருமணமான புதிதில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தேன். அந்த பேட்டி விவாகரத்து ஆன பிறகு தான் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. எனவே அந்த வீடியோவை நீக்கி விடுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் ஆனால் அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் செவிசாய்க்கவில்லை என்றும் இது தனக்கு வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தற்போது தன்னுடைய முன்னாள் கணவர் ஒரு பெரிய பிளாட்பார்முக்குள் சென்றுள்ளதால், அவரை பற்றி கூகுளில் தேடும்போது இந்த வீடியோ தான் முதலில் தெரிகிறது என்றும், இது குறித்து பலரும் என்னிடம் கேட்கும்போது எனக்கு மிகவும் மன அழுத்தமாகவும், மன உளைச்சலாகவும் உள்ளது என்றும், எனவே அந்த வீடியோவை ரிமூவ் பண்ணுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

தீபா நடராஜன் இந்த அறிவிப்பு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES