அதை செய்ய முடியாது, தண்டனை கொடுங்கள் அல்லது வீட்டைவிட்டு வெளியேற தயார்- கறாராக பேசிய போட்டியாளர்

அதை செய்ய முடியாது, தண்டனை கொடுங்கள் அல்லது வீட்டைவிட்டு வெளியேற தயார்- கறாராக பேசிய போட்டியாளர்

பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இதுவரை 3 பேர் வெளியேறிவிட்டார்கள். நாடியா, அபிஷேக் கடைசியாக சின்ன பொண்ணு என 3 பேர் வெளியேறிவிட்டார்கள்.

இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியது மக்கள் நினைத்த ஒன்று தான், இதனால் எந்தவித ஒரு சலசலப்பும் இல்லை.

இன்று காலை பிக்பாஸ் 5வது சீசனின் முதல் புரொமோ வந்துள்ளது. அதில் நிரூப்பை பெண் போட்டியாளர் ஒருவரை தனக்கு உதவியாளராக நியமிக்க பிக்பாஸ் கூறுகிறார்.

நிரூப், அக்ஷாராவை கூற அவர் தனக்கு இதில் விருப்பம் இல்லை என்றும் தண்டனை ஏற்க தயார் அல்லது வீட்டைவிட்டு வெளியே அனுப்பினாலும் செல்ல தயார் என கறாராக கூறுகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES