மனைவி வருகையை பார்த்தவுடன் ராஜூவின் ரியாக்சன்: செம சாங் செலக்சன் பிக்பாஸ்!

மனைவி வருகையை பார்த்தவுடன் ராஜூவின் ரியாக்சன்: செம சாங் செலக்சன் பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதும், மிகவும் நெகிழ்ச்சியான இந்த டாஸ்க் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் நிரூப் அப்பா வந்ததை அடுத்து சற்றுமுன் வெளியான இரண்டாவது புரமோவில் ராஜூவின் மனைவி மற்றும் தாயார் வருகை தருகின்றனர். ராஜுவின் மனைவி உள்ளே நுழைந்தவுடன் ராஜு நேராக சென்று அவரை கட்டிப்பிடித்து தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் பின்னணியில், ‘நீ கவிதைகளாய், கனவுகளாய், கயல்விழியே’ என்ற பாடலை பிக்பாஸ் ஒளிபரப்பினார். ‘மரகத நாணயம்’ என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் ராஜூ அவரது மனைவியை சந்திக்கும் காட்சிக்கு பொருத்தமாக இருந்தது.

அதேபோல் ராஜுவின் அம்மா அவர்கள் வந்தபோது அவரையும் கட்டிப்பிடித்து ராஜூ உணர்ச்சிவசப்பட்ட போது ’உன்னை பார்த்தால் போதும், எந்தன் அழகு குட்டி செல்லம், இந்த ஜென்மம் தீரும்’ என்ற பாடலை பிக்பாஸ் ஒளிபரப்பினார். தாய்மை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இந்த பாடலும் செம செலக்சன் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் ராஜூவின் குடும்பத்தினரின் வருகை பிக்பாஸ் வீட்டையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News