இதற்கு பிறகு தான்.. உடலுறவு விஷயத்தில் ஈடுபாடு அதிகமாச்சு.. கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!

இதற்கு பிறகு தான்.. உடலுறவு விஷயத்தில் ஈடுபாடு அதிகமாச்சு.. கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் மிக அதிகமாக நடித்திருக்கிறார்.

தமிழிலும் சில படங்களில் நடித்திருப்பதால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமான ஒரு நடிகையாக இருக்கிறார்.

மும்பையில் பள்ளி படிப்பையும், சிடென்ஹம் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தார். அக்ஷய் வர்டே என்ற தொழிலதிபரை, கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்தார்.

இந்தி மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்த சமீரா ரெட்டி, தமிழில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

அடுத்து அஜீத்குமார் நடித்த அசல் என்ற படத்தில், சமீரா ரெட்டி நடித்திருந்தார், அதைத்தொடர்ந்து ஆர்யா, மாதவன் இரட்டை கதாநாயகர்களாக நடித்திருந்த வேட்டை என்ற படத்தில் சமீரா ரெட்டி மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார்.

நடிகர் விஷால் நடித்த வெடி என்ற படத்திலும் சமீரா ரெட்டி நடித்திருந்தார். தமிழில் 4 படங்களில் நடித்தும், பெரிய அளவில் சமீரா ரெட்டி முன்னணி நடிகையாக வரவில்லை என்றாலும், அவர் நடித்த அனைவருமே முன்னணி நாயகர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

சமீரா ரெட்டி, கிரிக்கெட் ஸ்டேடியங்களில் அடிக்கடி காணப்படுகிறார். மும்பை கிரிக்கெட் அணி நட்சத்திர தூதுவராகவும் கலந்துக்கொண்டு இருக்கிறார். அந்த போட்டிகள் நடக்கும் போது முக்கிய பிரபலமாக நடனமாடி கலக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை கிரிக்கெட் மைதானத்தில், தொழிலதிபர் விஜய் மல்லையா, சமீரா ரெட்டியை கட்டிப்பிடித்து முத்தமிட்டபடி பயங்கர வைரலானது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை சமீரா ரெட்டி வெளிப்படையாக பல விஷயங்களை பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது,

நான் ரெண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறேன் என்னுடைய உடல் உண்டாகி விட்டது. சதைகள் தளர்ந்து விட்டது. வெள்ளை முடி வந்து விட்டது நரைமுடி வந்து விட்டது.

ஆனாலும் என்னை நான் கவர்ச்சியாக உணர்கிறேன் இன்னும் சொல்லப்போனால் படுக்கை அறையில் முன்பை விட தற்போது தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி.

மேலும் மனிதனாக பிறந்த யாருமே தங்களுடைய தோற்றம் குறித்து தங்களுடைய அழகு குறித்து வருத்தப்பட தேவை கிடையாது. நாம் வருத்தப்படுவதற்காக பிறக்கவில்லை, வாழ்க்கை வாழ்வதற்காக பிறந்திருக்கிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அதேபோல ஒருவரின் தோற்றத்தை வைத்து இவர் இப்படித்தான் இருப்பார் என்று முடிவு செய்வதும் தவறு என கூறி இருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி..
வயதான பிறகு தான், உடலுறவு விஷயத்தில் ஈடுபாடு அதிகமாச்சு என்று கூச்சமின்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார் சமீரா ரெட்டி.

LATEST News

Trending News

HOT GALLERIES