"அவன்கிட்ட என்ன வேணா பண்ணிக்கோ.. இதை மட்டும் பண்ணிடாத.." ஆர்த்தியிடம் கெஞ்சிய ஜெயம் ரவி தாய்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ரவி மோகன் (ஜெயம் ரவி), சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண விழாவில் பாடகி மற்றும் தெரபிஸ்ட் கெனிஷா பிரான்சிஸுடன் கலந்து கொண்டது இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது.
இது, ரவி மோகனின் மனைவி ஆர்த்தியுடனான பிரிவு மற்றும் விவாகரத்து விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியது. 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 2024 செப்டம்பரில் ரவி மோகன் பிரிவை அறிவித்திருந்தார்.
ஆனால், ஆர்த்தி, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அறிக்கையில், "எனது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ரவி, 18 ஆண்டுகளாக எனக்கு ஆதரவாக இருந்தவர்.
ஆனால், பொறுப்புகளை விட்டு விலகிவிட்டார். நானும் என் மகன்களும் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறோம். என் குழந்தைகள் 10 மற்றும் 14 வயதுடையவர்கள்.
அவர்களால் சட்டப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், தந்தையால் கைவிடப்பட்டதை உணர முடியும்," என்று உருக்கமாக கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரவி மோகன் அறிக்கை வெளியிட்டு, "எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி உண்மையின்றி திரிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
என் குழந்தைகளை பொதுவெளியில் நிதி ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை பார்க்க வேதனையாக இருக்கிறது. கெனிஷா எனக்கு தோழியாக அறிமுகமாகி, இப்போது அழகான துணையாக மாறியுள்ளார்.
நான் என் மனைவியை மட்டுமே பிரிகிறேன், குழந்தைகளை அல்ல," என்று தெளிவுபடுத்தினார். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ரவி மோகனின் பெற்றோர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், ரவியின் தாய், "ரவி - ஆர்த்தி திருமண பேச்சுவார்த்தையின்போது, ஆர்த்தியை தனியாக அழைத்து, ரவி நடிகராக இருப்பதால் பல பெண்களுடன் இணைந்து நடிக்க வேண்டிய சூழல் வரும்.
எந்த சூழ்நிலையிலும் அவனை சந்தேகப்படாதே, அவன் நல்ல பையன் என்று அறிவுறுத்தினேன். ஆர்த்தி, ரவிக்கு தாயாக இருந்து அவரை பாதுகாத்து, எங்கள் குடும்ப பொறுப்புகளை ஏற்று, ரவியை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றார்," என்று உருக்கமாக பேசினார்.
ரவியின் தந்தையும், "நாங்கள் ஆர்த்தியை மருமகளாக நடத்தவில்லை, மகளாகவே பாவித்தோம். ஆர்த்தியும் எங்களை அப்படியே பார்த்து, மரியாதையுடன் கவனித்து வந்தார்.
இதை பார்க்கும்போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது," என்று கூறினார். இந்த பேட்டியை பார்த்த இணையவாசிகள், "இப்படிப்பட்ட ஒரு மனைவியை விட்டு, ரவி மோகன் துரோகம் செய்திருக்கிறார். இதை கண்டிக்க வேண்டும்," என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம், ரவியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையை பெரிதும் பாதிக்கலாம் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.