ஒரு இரவுக்கு பல லட்சம்.. சிக்கிய நித்யா மேனன்.. கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஒரு இரவுக்கு பல லட்சம்.. சிக்கிய நித்யா மேனன்.. கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன், பொது இடங்களில் ரசிகர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து கடுமையான கருத்தைப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளார். 

திருச்சிற்றம்பலம் (2022) படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நித்யா, சமீபத்திய பேட்டி ஒன்றில், “நாங்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, ரசிகர்கள் புகைப்படம் எடுக்கவும், ஒட்டி உரசி நிற்கவும் கேட்கிறார்கள். 

நடிகைகள் என்றால் சுலபமாக தொட்டுவிடலாம் என நினைக்கிறார்கள். நாங்கள் பொம்மைகளா?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். நித்யாவின் இந்த கருத்து, பொது இடங்களில் நடிகைகள் எதிர்கொள்ளும் தொந்தரவுகளை வெளிப்படுத்தினாலும், அதை அவர் தெரிவித்த விதம் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. 

சிக்கிய நித்யா மேனன் 

நகைக்கடை திறப்பு விழாக்கள், பட வெளியீட்டு விழாக்கள், விருது விழாக்கள் போன்றவற்றில் ரசிகர்கள் நடிகைகளுடன் செல்பி எடுக்க முண்டியடிப்பது, அவர்களை அனுமதியின்றி தொட முயல்வது போன்ற சம்பவங்கள் பலமுறை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக வெளியாகியுள்ளன. இது போன்ற விஷயத்தில் நித்யா மேனன் சிக்கியுள்ளார்.

இவை, நித்யாவின் கருத்துக்கு ஆதாரமாக அமைந்தாலும், அவரது பேச்சு ஒரு தரப்பு ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. 

சமூக வலைதளங்களில், “இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் தொட்டால் மட்டும் அனுமதிப்பார்கள், ரசிகர்கள் தொட்டால் எதிர்ப்பார்களா?”, “ஒரு இரவுக்கு லட்சக்கணக்கில் விலை பேசுபவர்கள் இப்படி பேசுவது நியாயமா?” என்று ஆக்ரோஷமான கருத்துகள் பதிவாகியுள்ளன. 

இந்த விமர்சனங்கள், நித்யாவின் கருத்தை தவறாக புரிந்து கொண்டு, அவரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. நித்யாவின் கருத்து, பொது இடங்களில் பெண்களின் தனிப்பட்ட எல்லைகளை மதிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக இருந்தாலும், அதை வெளிப்படுத்திய விதம் சில ரசிகர்களை புண்படுத்தியுள்ளது. 
 

இதற்கு முன்பு, 2023-ல் ஒரு தமிழ் நடிகரால் துன்புறுத்தப்பட்டதாக வந்த வதந்திகளை அவர் மறுத்திருந்தார், மேலும் “பத்திரிகைகள் இப்படி உண்மையில்லாத செய்திகளை பரப்புவது வருத்தமளிக்கிறது” என்று கூறியிருந்தார். 

இந்த சம்பவமும் அவரது தற்போதைய கருத்தும், சினிமா துறையில் நடிகைகள் எதிர்கொள்ளும் சவால்களை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.

LATEST News

Trending News