"கூச்சமே இல்ல.. ஜெயம் ரவி முதலில் என்னிடம் கேட்ட விஷயம்.." கெனிஷா பேச்சை கேட்டு கொந்தளித்த ரசிகர்கள்!
நடிகர் ஜெயம் ரவி பாடகி கெனிஷா இடையே இருக்கக்கூடிய உறவு பற்றியும் புதிதாக சொல்லி தெரிய வேண்டியது இல்லை ஊரறிந்த விஷயம்.
இந்நிலையில், பாடகி கெனிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஜெயம் ரவி எப்படி தனக்கு பழக்கமானார்.. அவர் தன்னிடம் பேசிய முதல் வார்த்தை என்ன என்பது பற்றி பேசி இருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள் கெனிஷாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
வாருங்கள் விஷயத்தை பார்க்கலாம். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பாடகி கெனிஷா ஒரு இசை நிகழ்ச்சி. அந்த இசை நிகழ்ச்சி யில் நிறைய இசைக்கலைஞர்கள் பாடகர் கலந்து கொள்வார்கள். சினிமா துறையில் உள்ளவர்கள் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டிருந்தேன். மேடையில் நான் பாடிய பாடலை கேட்டுவிட்டு ஜெயம் ரவி என்னை அழைத்து இந்த பாடலை பாடியது நீங்கள் தானா..? நான் நீங்கள் இந்த பாடலுக்கு நடித்திருக்கிறீர்கள்.. என்று தானே நினைத்தேன். இந்த பாடலை பாடியது நீங்கள் தானா..? நிஜமாகவே இது உங்கள் குரல் தானா..? என்று கேள்வி எழுப்பினார்.
எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. என்ன சார் சொல்றீங்க.. இது என்னுடைய பாடல்.. என்னுடைய குரல் தான்.. என்று கூறினேன். அவருக்கு தெரியவில்லை.. நான் ஒரு பாடகி என்று அவருக்கு தெரியவில்லை. நான் ஒரு நடிகை என்ற புரிதல் தான் அவருக்கு ஆரம்பத்தில் இருந்திருக்கிறது என கூறியிருக்கிறார் பாடகி கெனிஷா.
இதைப்பற்றி ரசிகர்களுக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால், இந்த பேட்டிக்கு அவர் அணிந்து வந்திருந்த ஆடையை பார்த்து ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
காரணம் ஏதோ பாத் டவல் போன்ற டிசைன் கொண்ட ஒரு ஆடையை அணிந்து கொண்டிருக்கிறார் நடிகை கெனிஷா.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன அவசரமோ குளிக்குற துண்டு வோட ஓடி வந்திருச்சு இந்த அம்மா என்று கொந்தளித்துள்ளார்.