"படுக்கையில் கொடுமை..முடியாது என கூறிய பிறகும்..? " பிரபல நடிகை குறித்து டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை பகீர்!
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பல நடிகைகள் தங்களுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில், நடிகை யோகலட்சுமி தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பொதுவாக நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து பேசும்போது பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது தான்.. ஆனால், யாரும் கட்டாயப்படுத்தியோ.. வேண்டாம் என்று சொன்ன பிறகோ, முடியாது என்று சொன்ன பிறகோ.. படுக்கையில் சம்மதிக்க வேண்டும் என்று கொடுமை செய்வது கிடையாது.
பட வாய்ப்பு வேண்டும் என்று தங்களை தாங்களே இழக்க கூடிய நடிகைகளால் தான் இப்படியான சம்பவங்கள் நடக்கிறது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு சம்மதிக்காத நடிகைகளுக்கும் பட வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால், சில நடிகைகள் பட வாய்ப்பு வேண்டும், பிரபல நடிகை ஆகவேண்டும் என்பதற்காக தங்களை சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளால் தான் அனைத்து நடிகைகளுக்கும் இப்படியான பெயர் வந்து விடுகிறது என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில், நடிகை யோகலட்சுமி கூறியதாவது, சினிமா பெண்களுக்கு எதிரான சிரமங்களை கொடுக்கத்தான் செய்கிறது, நாம் நடந்து கொள்வது.. நாம் எதிர்கொள்வது.. என்ற இரண்டு விஷயங்கள் இதில் இருக்கிறது.
இதுதான் இந்த துறையில் மிகவும் முக்கியம் என நினைக்கிறேன். சிலர் அப்படி தவறாக கேட்டாலும் கூட நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ.. அப்படியே தான் இருக்க வேண்டும்.
உங்களுக்கு அது வேண்டுமென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், வேண்டாம் என்று உறுதியோடு நின்றால் அந்த உறுதியான முடிவில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும்.
அந்த வாய்ப்பு வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுப்பது சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட முடிவு. நாம் எப்படி இருக்கிறோமோ அதைப்போன்று தான் அனைத்தும் இருக்கிறது.
வேண்டாம் என்றால் வேண்டாம் தான்.. அதில் உறுதியாக இருக்க வேண்டும் என நடிகை யோகலட்சுமி அட்ஜஸ்ட்மென்ட் நடப்பது குறித்து விளக்கமாக பதில் அளித்து இருக்கிறார்.
ஆக, நடிகை யோகலட்சுமி பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கும் நடிகைகள் மீதும் தவறு இருக்கிறது நடிகைகள் அனைவரும் முடியாது என்று விடாப்பிடியாக இருக்கும் பொழுது யாரும் படுக்கையை பகிர்ந்து கொண்டுதான் ஆக வேண்டும் கொடுமை செய்யப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.