பலருடன் அதை பண்ணுவேன்.. கண்டும் காணமா இருங்க.. கணவரிடம் கண்றாவி பேச்சு.. சீரியல் நடிகை ஆடியோ..

பலருடன் அதை பண்ணுவேன்.. கண்டும் காணமா இருங்க.. கணவரிடம் கண்றாவி பேச்சு.. சீரியல் நடிகை ஆடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பொன்னி' சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்து பிரபலமான நடிகை ரிஹானா பேகம், 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றி ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர். 

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர், சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். 

Chennai Poonthamalai police station marriage fraud case actress Rihana Begum Pandian Storesசமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரிஹானா, சீரியல் நடிகர்களின் குடும்ப பிரச்சனைகளில் தலையிட்டு பேசுவதும் பரபரப்புகளை ஏற்படுத்துவதும் அவர் வழக்கமாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் அர்னவ் மற்றும் அவரது மனைவி திவ்யா ஸ்ரீதருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, ரிஹானா திவ்யாவுக்கு ஆதரவாக பேசி, அர்னவ்வுடன் தனது ஆடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதேபோல, நடிகை சம்யுக்தா மற்றும் அவரது கணவர் இடையே பிரச்சனை ஏற்பட்டபோது, சம்யுக்தாவின் கணவருக்கு ஆதரவாக பேசியதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சினிமா துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து பல்வேறு தளங்களில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி, சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் ராஜ் கண்ணன் என்பவர் நடிகை ரிஹானா மீது திருமண மோசடி புகார் அளித்துள்ளார். 

அவர் தாக்கல் செய்த புகாரின்படி, ரிஹானாவுக்கு ஹபிபுல்லா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால், இதற்கு முன் அவர் முதல் கணவருடன் விவாகரத்து பெறவில்லை என்பது திருமணத்திற்குப் பிறகு தெரியவந்துள்ளது. 

ராஜ் கண்ணன், ரிஹானாவுக்கு முதலில் 9 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், பின்னர் சிறு தொகைகளாக ஆன்லைனில் மேலும் 9 லட்சம் ரூபாயை பெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மொத்தம் 18.5 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராஜ் கண்ணனின் புகாரில், திருமணத்திற்கு பிறகு பூந்தமல்லியில் வீட்டில் வசிக்க முடிவு செய்தபோது, ரிஹானா சின்னத்திரையில் நடிக்க பலருடன் பழக வேண்டிய நிர்பந்தம் இருப்பதாகவும், அதை அவர் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் ஆடியோ ஆதாரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இதை அடுத்து, ரிஹானா, அவர் தாய் மும்தாஜ், மற்றும் கணவர் ஹபிபுல்லா ஆகிய மூவர்மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், சென்னை பூந்தமல்லி காவல்துறை விசாரணை மேற்கொண்டு, ரிஹானா மற்றும் தாய் உட்பட மூவரையும் இன்று மாலை 3 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ரிஹானாவிடம் பேச முயற்சி செய்தபோது, அவர் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

நடிகை ரிஹானா பேகத்தின் இந்த சர்ச்சை, சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான புகார் உண்மையா அல்லது புனையப்பட்டதா என்பது விசாரணையின் முடிவைப் பொறுத்திருக்கிறது. 

இது அவரது தொழில்முறை வாழ்க்கையிலும் சமூக வலைதள செல்வாக்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News