குழந்தை இருக்குன்னு கெஞ்சியும்.. கொடுமை.. வாயில் வைத்து திணித்து.. பிரபல நடிகை பகீர்!

குழந்தை இருக்குன்னு கெஞ்சியும்.. கொடுமை.. வாயில் வைத்து திணித்து.. பிரபல நடிகை பகீர்!

பிரபல நடிகை ஸ்மினு சிஜோ (Sminu Sijo) எப்படி சினிமாவுக்குள் வந்தேன். அதன் பின் இருக்கும் கொடுமையான விஷயம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவி செய்துள்ளார். 

அவர் கூறியதாவது, சினிமாவுக்கு வந்ததற்கு காரணம் என் தோழி. அவளுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, என் அனுமதியின்றி அவளிடம் இருந்து என்னுடைய புகைப்படத்தை அனுப்பி, அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்து என்னை அழைத்தாக சொன்னாள்.

அதைக் கேட்டு நான் மிகவும் பதற்றமடைந்தேன். பிடிக்காத உணவை வாயில் வைத்து திணித்து ஊட்டிவிடுவது போன்ற உணர்வில் இருந்தேன். பிறகு, என் கணவர், உறவினர்கள், ஸ்ரீனி அண்ணன் (ஸ்ரீனிவாசன்) ஆகியோர் எனக்கு தைரியம் அளித்தனர். 

அந்தப் படம் ரோஷன் ஆண்ட்ரூஸின் ‘ஸ்கூல் பஸ்’. அதில் நடிக்கும்போது பயத்தில் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அவ்வளவு பயமாக இருந்தது. அதற்குப் பிறகு நான் ஒதுங்கி நின்றபோது, ஸ்ரீனி அண்ணன் என்னிடம் கேட்காமலே ‘நான் பிரகாஷன்’ படத்தில் என்னை நடிக்க வைத்தார். 

ஸ்ரீனி அண்ணனின் மனைவி வேடத்தில், சத்யன் அந்திக்காடு சாரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, புதுமுகமான எனக்கு ஒரு பெரிய பரிசு போல இருந்தது. 

ஸ்ரீனி அண்ணனின் மனைவி வேடத்தில் நடித்தவர்களின் பட்டியலை எடுத்தால், அவர்களுக்கு அருகில் நிற்கக் கூட எனக்கு தகுதி இல்லை. ஸ்ரீனி அண்ணன் என்னை பரிந்துரைத்தபோது, சத்யன் சார் அதை ஏற்றுக்கொண்டது அவர்மீது இருந்த நம்பிக்கையாக இருக்கலாம். 

அந்த நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிக்கிறேன். நான் செய்தவை அனைத்தும் நல்ல படங்களாக இருந்தன. வேடத்தின் பெரிய, சிறிய அளவு முக்கியமல்ல; யார் இயக்குகிறார்கள் என்பதைத்தான் பார்க்கிறேன். நான் நடிப்பதில்லை; வீட்டிலும் ஊரிலும் பழகுவது போலவே கேமரா முன்பும் செய்கிறேன். 

படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்களுடன் நல்ல நட்பு இருந்தால், பாதி வேலை முடிந்துவிடும். பிறகு, இயல்பாக பழக முடியும். நான் சினிமாவில் நடிப்பேன் என்பது கனவில்கூட நினைக்காத விஷயம். 

சிறுவயதில் பாலராமா, மனோரமா, களிக்குடுக்கா போன்றவற்றைப் படிப்பேன். அவற்றில் ஒரு புகைப்படம் அச்சாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவை வெறும் ஆசைகளாகவே இருந்தன; சினிமா நடிகையாக ஆவேன் என்று நினைக்கவில்லை. 

ஏதாவது ஒரு பெரிய விஷயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால், பள்ளியில் படிக்கும்போது விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றேன். ஆனால், அதை நீண்ட காலம் தொடர முடியவில்லை. 

வியாபாரி விவசாயி சங்கத்தின் சங்க நாசேரி தாலுக்காவின் மகளிர் தலைவர், ஒரு வங்கியின் இயக்குநர் குழு உறுப்பினர் என்று இருந்தேன். அரசியல் எனக்கு பொருந்தாது என்று புரிந்தது. திருமணமாகி, இரு குழந்தைகளின் தாயாகி, கணவருடன் சந்தோஷமான வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தபோது, சினிமா என்னைத் தேடி வந்தது. 

சினிமாவில் வாய்ப்பு கிடைத்த போது எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறி தவிர்க்க முயற்சி செய்தேன். எனக்கு சினிமா வேண்டாம் என கெஞ்சினேன். ஆனால், அவற்றை எதுவும் கேட்காமல், என்னை சுற்றி இருந்தவர்கள் சினிமாவுக்குள் என்னை தள்ளி விட்டார்கள். 

முதல் சில நாள் படப்பிடிப்பில் எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது என நடிகை ஸ்மினு சிஜோ கூறியிருப்பது அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

LATEST News

Trending News