ஹீரோயினாக அறிமுகமாகும் தேவயானியின் மகள்.. சரிகமப-வை தொடர்ந்து இப்படியொரு வாய்ப்பா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீனியர் சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகை தேவயானியின் மகள் இனியா கலந்துகொண்டுள்ளார்.
இவர் பாடல்களை பாடிய விதம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் ரசிகர்களை சம்மதித்துள்ளார். இந்த நிலையில், சரிகமப-வில் பாடகியாக கலக்கிக்கொண்டிருக்கும் இனியா விரைவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.
அதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் கடந்த மார்ச் 14ம் தேதி வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் Court – State vs. A Nobody. ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா, சாய்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
சூப்பர்ஹிட்டான இப்படத்தின் தமிழ் உரிமையை இயக்குநர் தியாகராஜன் வாங்கியுள்ளாராம். இதில் தேவயானியின் மகள் இனியாதான் ஹீரோயினாக அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.