கைது செய்யப்படும் கயல்.. எழில் நிலைமை? சன் டிவி கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ
கயல் சீரியலில் தற்போது பரபரப்பான பல சம்பவங்கள் தொடர்ந்து கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தி வருகிறது. எழில் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் இருக்க, அவரை கண்டுபிடிக்க கயல் சிசிடிவி மூலமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
மறுபுறம் எழிலுக்கு ஆபரேஷன் செய்தால் தான் அவர் உயிர்பிழைப்பார் என அவரது அம்மாவிடம் டாக்டர் கூறுகிறார். அதனால் எழில் இந்த நிலைக்கு போக காரணமான கயலை பழிவாங்க வேண்டும் என எழிலின் அம்மா திட்டம் போடுகிறார்.
கைதாகும் கயல்
எழில் அம்மா நேராக சென்று போலீசில் புகார் அளிக்க, உடனே போலீஸ் கயல் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்கிறது.
அடுத்து என்ன நடக்கும்? அடுத்த வார ப்ரோமோவை பாருங்க.