அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்திருக்கு.. ஆனா.. அந்த நேரத்தில் அவங்க கூட இருப்பாங்க.. நடிகை இவானா ஓப்பன் டாக்!
தமிழ் சினிமாவில் ‘நாச்சியார்’ மற்றும் ‘லவ் டுடே’ படங்களின் மூலம் அறிமுகமாகி, பிரபலமான மலையாள நடிகை இவானா, சமீபத்தில் IndiaGlitz YouTube சேனலுக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர வேண்டும் எனும் ‘காஸ்டிங் கவுச்’ பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பேட்டியில், “சினிமாவில் அறிமுகமாகும்போது, பட வாய்ப்புக்கு படுக்கையை பகிர வேண்டும் என்று கேட்கப்படுவது உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு இவானா, “ஆம், அந்த அச்சம் எனக்கு இருந்தது. ஆனால், எனது அம்மாவும் அண்ணனும் எப்போதும் என்னுடன் இருந்ததால், இதுபோன்ற பிரச்சினைகள் என்னை அணுகவில்லை.
எனக்கு நேரடியாக இப்படியான அனுபவங்கள் இல்லை என்றாலும், எனது தோழிகளும், சக நடிகைகளும் இதுபோன்ற கோரிக்கைகளை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர். அவர்களின் அனுபவங்களை கேள்விப்பட்டிருக்கிறேன்.
என்னுடன் எப்போதும் குடும்பத்தினர் இருந்ததால், இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டேன். இதற்காக நான் பாக்கியசாலியாக உணர்கிறேன்,” என பதிலளித்தார்.
இவானாவின் இந்த வெளிப்படையான பேச்சு, திரையுலகில் இன்னும் நிலவும் ‘காஸ்டிங் கவுச்’ பிரச்சினை குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. இவர், பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, ‘லவ் டுடே’ படத்தில் நாயகியாக நடித்து பாராட்டுகளை பெற்றவர்.
சமீபத்தில், ஸ்ரீ விஷ்ணுவுடன் இணைந்து தெலுங்கு படமான ‘சிங்கிள்’ மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். இவானாவின் இந்த பேட்டி, பெண்கள் திரையுலகில் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்துவதோடு, குடும்ப ஆதரவின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.