தென்னிந்திய இயக்குநர்கள் பேடர் ப்ரா அணிய வற்புறுத்துவார்கள்!! அதிர்ச்சி கொடுத்த நடிகை டாப்ஸி..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை டாப்ஸி. ஆடுகளம் படத்தில் கிடைத்த வெற்றிக்கு பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த டாப்ஸி, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

டாப்ஸி பேட்டிகளில் போல்ட்டாக பேசுவது பலரது கவனத்தையும் ஈர்க்கும். அந்தவகையில் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ASSI என்ற படத்தில் நடித்துள்ளார் டாப்ஸி. கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் வெளியான நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பாட்காஸ்ட்டில் கலந்து கொண்டு சில விஷயங்களை பேசியுள்ளார்.
அதில், இந்திய சினிமாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெண்ணின் உடலை ஒருவிதமாக பார்க்கிறார்கள். தென்னிந்திய சினிமாவில் பெரும்பாலும் பெண்களின் இடுப்பு மற்றும் தொப்புள் பகுதியை முன்னிலைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

ஆனால் பாலிவுட்டில் நிலைமை அப்படியே தலைகீழ், அங்கே க்ளீவேஜ் எனப்படும் மார்பகப்பகுதியை காட்சிகளில் திணித்துக் காட்டுவதிலேயே இயக்குநர்கள் அதிக கவனம் காட்டுகின்றனர். அதேபோல், படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் எதிர்கொள்ளும் தர்ம சங்கடமான சூழல் குறித்து பேசியிருக்கிறார்.

அதில், சில இயக்குநர்கள் நடிகைகளை பேடட் ப்ரா அணியுமாறு வற்புத்துவதாகவும், ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்கும் ஒரு செட்டில், எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இத்தகைய மாற்றங்களை செய்யச் சொல்வது மிகுந்த மன உளைச்சலை தருவதாகவும் தெரிவித்துள்ளார் டாப்ஸி.