திரிஷாவை சாக்லேட்டுகளுடன் ஒப்பிட்டு ரகளை பண்ணும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..!
மே மாதம் 4-ம் தேதி 1983-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.&தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆச்சார்யா, இதில் நடிக்க த்ரிஷா ஒபந்தம் செய்யப்பட்டு இருந்தார். படபிடிப்பு தொடங்க உள்ள நிலையில், தான் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா.சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் த்ரிஷா.
திரைப்படங்களில் நடிக்கத் துவங்குவதற்கு முன் சென்னை அழகியாக 1999-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் த்ரிஷா. தமிழில் 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் நாயகியின் தோழியாக அறிமுகமானார் நடிகை த்ரிஷா.
இவரது பூர்வீகம் கேரளா என்றாலும் அவர் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். இவரது பெற்றோர் கிருஷ்ணன் - உமா தம்பதியர் ஆவர். 1999ம் ஆண்டு மிஸ் சேலம் மற்றும் மிஸ் சென்னை பட்டம் வென்ற த்ரிஷா, ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் பணியாற்றினார்.
பின்னர் ஜோடி உள்ளிட்ட சில படங்களில் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சாமி, கில்லி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைய தமிழ் சினிமாவின் நம்பர்-1 நடிகையாக உயர்ந்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். த்ரிஷாவிற்கு நாய்கள் என்றால் உயிர். தெருவோரம் ஆதரவற்ற கிடக்கும் நாய்களை கண்டுவிட்டால் போதும் அதை உடனடியாக தனது வீட்டிற்கு சென்று வளர்த்து பராமரிப்பார்.
விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் தூதராகவும் இருக்கிறார் த்ரிஷா. அதனை தொடர்ந்து 2003-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான வர்ஷம் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக சிறந்த தெலுங்கு திரைப்பட நடிகைக்கான விருது, சந்தோசம் விருது ஆகியவற்றை த்ரிஷா பெற்றார்.
மாடலிங் துறையிலிருந்து பல விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்த த்ரிஷா இயக்குநர் பிரியதர்ஷனின் ’லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.
ஆனால், அமீரின் ‘மெளனம் பேசியதே’ முதலில் வெளியானது. அந்தப் படம் முழுக்க (பாடல்கள் உட்பட ) சுடிதார் உடையில் வந்து நம் சென்னையில் பேருந்துகளிலும் டூவீலர்களிலும் நம்மைக் கடந்து செல்லும் அழகான கல்லூரிப் பெண்களைப் போல் இருந்தார்.
இதனால் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். அதனை தொடர்ந்து 2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார் நடிகை த்ரிஷா.
சில காரணங்களால் சிரஞ்சீவி கூட நடிக்க இருந்த இந்த படத்தில் இருந்து விலகுகிறேன். வேறு ஒரு நல்ல கதையுள்ள படத்தில் விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று தன் அன்பான தெலுங்கு ரசிகர்களுக்கு த்ரிஷா தன் டிவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார்.
திரைப்படங்களுக்குள் அழகு, நடிப்பு, நடனம், கச்சிதமான உடலமைப்பைத் தக்க வைத்திருப்பது என அனைத்திலும் குறை வைக்காமல் இருப்பதே அவருடைய வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகிறது.
அவருடைய புன்னகை தவழும் முகம் எப்போதும் பார்ப்பவர்களை வசீகரிக்கக் கூடியது. மனதுக்குப் புத்துணர்வு அளிக்கக்கூடியது. இதையே அவருடைய தனிச் சிறப்பு என்று சொல்ல முடியும்.
த்ரிஷாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 90s கிட்ஸ்களை தாண்டி 2K கிட்ஸ்களுக்கும் தன்னுடைய அழகை அழகாக பரிமாறி வருகிறார். சமீபத்தில் வெளியான அரண்மனை படத்தில் ரசிகர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சியை திகட்ட திகட்ட ஊட்டிவிட்டார் அம்மணி.