நிகழ்ச்சியை விட்டு கிளமிய ராதா ரவி! வாய்பேச முடியாமல் நின்ற தலைவர்! கூட்டத்தில் நடந்த சம்பவம்!

நிகழ்ச்சியை விட்டு கிளமிய ராதா ரவி! வாய்பேச முடியாமல் நின்ற தலைவர்! கூட்டத்தில் நடந்த சம்பவம்!

பெஃப்சி திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் மூன்றாம் முறையாக ஆர்.கே.செல்வமணி தலைவராக வெற்றி பெற்றார். இதன் பதவியேற்பு விழா சென்னை வடபழனி பிரசாத் லேப்பில் நேற்று நடைபெற்றது.

நடிகர் ராதா ரவி நிகழ்ச்சி தொடங்கும் முன்பாகவே வருகை தந்தார். பின் அங்கிருந்த பேனரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சங்க நிர்வாகிகளின் பெயருக்கு நடுவே என் பெயர் இல்லை என்று அவர் கோபம் வந்ததாம்.

பின் செல்வமணியிடம் குஷ்பு, பாக்யராஜ் பெயரை போட்டிருக்கீங்க, ஏன் என் பெயரை பேனரில் போடவில்லை என கோபத்துடன் கேட்டாராம். ஆனால் செல்வமணி அமைதியாக இருந்தாராம்.

பின்னர் வருகை தந்த அமைச்சர் கடம்பூர் ராஜு என் பேரை போட வேண்டாம் என கூறினாரா என கேட்க இந்த அரசியல் விவகாரமானதால் செல்வமணி இல்லை என மறுத்தாராம்.

இதனால் ராதா ரவி புதிதாக பதவி பொறுப்பு ஏற்பவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து சொல்லி அங்கிருந்து விழாவுக்கு முன்பாகவே கிளம்பிவிட்டாராம்.

 

 

LATEST News

Trending News