திருமணத்திற்கு பின் சமந்தா சொன்ன குட் நியூஸ்.. என்ன தெரியுமா, புகைப்படம் இதோ
இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த சில ஆண்டுகளாக படத்தில் நடிக்கவில்லை என்றாலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயக்குநர் ராஜ் நீடிமொருவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், திருமணத்திற்கு பின் ஒரு குட் நியூஸ் ஒன்றை சமந்தா கூறியுள்ளார்.
அது என்னவென்றால், மூன்று ஆண்டுகள் கழித்து சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டிரைலர் வெளிவரவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் 'மா இண்டி பங்காரம்'. இப்படத்தின் டீசர் டிரைலர் வருகிற ஜனவரி 9-ஆம் தேதி வெளிவரும் என சமந்தா அறிவித்துள்ளார். இதோ அந்த போஸ்டர்:

