முத்துவால் பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சத்யா, கதறும் குடும்பம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

முத்துவால் பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சத்யா, கதறும் குடும்பம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை

குடும்ப கதை, பெண்களுக்கான கதை என்று தான் இப்போது பல சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அப்படி விஜய் டிவியில் அண்ணாமலை என்பவரின் குடும்ப கதையாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இத்தனை நாள் வீட்டுப் பிரச்சனை என கதையை இழுத்தார்கள், இப்போது அடுத்த பிரச்சனை துவங்கிவிட்டது. முத்துவால் தனது வீட்டிற்கு மீண்டும் வந்த விஜயா ரோஹினியுடன் மறுபடியும் பிரச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டார்.

முத்துவால் பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சத்யா, கதறும் குடும்பம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial June 09 Episode

கடையில் சிசிடிவி கேமரா பார்த்து திட்டியது பத்தாது வீட்டிற்கு வந்தும் ரோஹினிக்கு போன் செய்து மிகவும் கேவலமாக பேசிவிட்டார். மனோஜுடன் ஒரு விருது விழாவிற்கு செல்லலாம் என ரோஹினி பிளான் அதையும் கெடுத்துவிட்டார் விஜயா.

எபிசோட்

இன்றைய எபிசோடில் தாயா-தாரமா என்ற ஷோ நடக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே ரோஹினி வர விஜயாவுடன் மனோஜும் வருகிறார். அந்த நிகழ்ச்சியில் விஜயா-மனோஜ் கலந்துகொண்டு விருது பெறுகிறார்கள்.

அதே ஷோவில் மனோஜை தன்னுடன் வந்து கலந்துகொள்ளுமாறு ரோஹினி கேட்க அப்போது விஜயா குறிக்கிட்டு கோபமாக பேசிவிட்டு செல்கிறார். சத்யா பிரச்சனை குறித்து மீனா-முத்து பேசுகிறார்கள். மீனா இது வேண்டாம் என கூற முத்துவோ சத்யா காதலிப்பது தவறில்லை என கூறுகிறார்.

கடைசியாக சிந்தாமணி மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து சத்யாவிற்கு எதிராக பிளான் போடுகிறார்கள். சிந்தாமணி கூறிய யோசனைப்படி ரேகா அப்பா சத்யா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.

இதனால் சத்யா போலீசாரால் கைது செய்யப்பட்டு அடிக்கப்படுகிறார், அதைக்கண்டு சத்யா அம்மா மற்றும் சீதா கதறுகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES