நடேசனால் நிலாவிற்கு ஏற்பட்ட சோகம், வருத்தத்தில் குடும்பத்தினர்...அய்யனார் துணை சீரியல்

நடேசனால் நிலாவிற்கு ஏற்பட்ட சோகம், வருத்தத்தில் குடும்பத்தினர்...அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை

இருட்டில் இருந்த குடும்பம் நிலா என்ற பெண் வந்ததால் அப்படியே வெளிச்சமாகி உள்ளது.

அவருக்கு ஏற்றார் போல் சேரன், சோழன், பாண்டி, பல்லவன் அனைவருமே தங்களை மாற்றிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் நடேசன் மட்டும் தான் என்ன செய்ய நினைக்கிறாரோ அதையே செய்து வருகிறார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து மது அருந்தி பெரிய கலாட்டா செய்துவிட்டார். வீடே அலங்கோலமாக இருந்ததை கண்டு மகன்கள் மிகவும் வருந்தி எப்படியோ வீட்டை சுத்தம் செய்தார்கள்.

நடேசனால் நிலாவிற்கு ஏற்பட்ட சோகம், வருத்தத்தில் குடும்பத்தினர்...அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial July 14 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த நடேசனிடம் நிலா அமைதியாக உட்கார்ந்து பேசுகிறார். நீங்கள் மட்டும் ஏன் இப்படி உள்ளீர்கள், குடிப்பது நல்லதா, சம்பாதிக்கிறீர்கள் உங்கள் பணம் தான், அதற்காக குடிக்கலாமா என பேச நடேசன் நிலா மீது சத்தியம் செய்து இனி குடிக்க மாட்டேன் என்கிறார்.

பிறகு சோழன் வீட்டுச் செலவிற்காக சம்பளத்தை அப்படியே கொடுக்க சேரன், பாண்டியும் தங்களிடம் இருக்கும் பணத்தை கொடுக்கிறார்கள்.

பணம் மீதம் இருக்க டிவி வாங்கலாம் என முடிவு செய்து குஷியில் இருக்கிறார்கள்.

நடேசனால் நிலாவிற்கு ஏற்பட்ட சோகம், வருத்தத்தில் குடும்பத்தினர்...அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial July 14 Episode

அந்த நேரம் நடேசன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வர சேரன் காலையில் தானே நிலா மீது சத்தியம் செய்தீர்கள், ஏன் குடித்தீர்கள் என கத்துகிறார். நடேசனின் செயலை கண்டு நிலா மிகவும் வருத்தப்பட மற்றவர்களும் வருந்துகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES