கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள்!
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது, இதனால் ஒட்டுமொத்த மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் காரணமாக லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மற்றும் பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
சூர்யா தற்போது சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார், விக்ரம் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார் மற்றும் சிவாகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.