உண்மையாகவே தீப்பிடித்த திரை: எல்லை மீறிய விஜய் ரசிகர்கள்!

உண்மையாகவே தீப்பிடித்த திரை: எல்லை மீறிய விஜய் ரசிகர்கள்!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அந்த எதிர்பார்ப்பு படத்தில் பாதிகூட இல்லை என்றால் என்ன ஆகும் என்பதற்கு விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம் என தெரிகிறது. இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரிலீஸுக்கு முன்னர் இருந்த நிலையில் இன்று முதல் காட்சி முடிந்ததும் இந்த படத்தை பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. தீவிரமான விஜய் ரசிகர்களே இந்த படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என கருத்துக் கூறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடலின் சில வரிகள் கடந்த சில நாட்களாக வைரலானது. அந்த வரிகள் இதோ:

திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தால் படை நடுங்கும்
அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடனும்
பலபேரின் முகமாக நின்னு ஆடுற புலிதானே
விளையாட நினைச்சா உன் விதி முடிப்பானே

இந்த பாடல் திரையில் தோன்றும் போது வேற லெவலில் ரசிகர்கள் இருப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் மதுரையில் உள்ள திரையரங்கு ஒன்றில் உண்மையாகவே திரை தீப்பிடித்துள்ளது. ‘பீஸ்ட்’ திரைப்படம் மிகவும் சுமாராக இருந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து தியேட்டரின் திரைக்கு தீ வைத்ததாகவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் விஜய் ரசிகர்கள் எல்லைமீறி இருப்பதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES