ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்த ராக்கிபாய்: ஆச்சரியத்தில் இந்திய திரையுலகம்

ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்த ராக்கிபாய்: ஆச்சரியத்தில் இந்திய திரையுலகம்

இந்தியாவில் இதுவரை மூன்று படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி கிளப்பில் இருந்துவரும் நிலையில் தற்போது நான்காவதாக ராக்கி பாயின் ‘கேஜிஎப் 2’ படம் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் உள்பட பான் இந்தியா திரைப்படமாக வெளியானது ‘கேஜிஎப் 2’. யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேஜிஎப் 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் iந்த படம் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் 250 திரையரங்குகளில் மட்டும் வெளியானாலும் நாளாக ஆக திரையரங்குகள் அதிகரித்து வசூலும் அதிகரித்தது. இந்த நிலையில் உலகம் முழுவதும் ‘கேஜிஎப் 2’ படம் தற்போது ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை ‘டங்கல்’, ‘பாகுபலி 2’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய திரைப்படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி கிளப்பில் இருக்கும் நிலையில் தற்போது நான்காவது படமாக ’கேஜிஎப் 2’ இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆயிரம் கோடியில் கிளப்பில் தமிழ் படமும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் ’பொன்னியின் செல்வன்’ அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES