நடிகை ஷகீலாவின் கர்ப்பதிறகு இவரா காரணம்..அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!

நடிகை ஷகீலாவின் கர்ப்பதிறகு இவரா காரணம்..அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!

தமிழ் சினிமாவில், கதாநாயகிகளுக்கு எப்படி முக்கியத்துவம் கிடைக்கிறதோ அதேபோல் ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகைகளுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், முக்கியத்துவமும் கிடைத்து விடுகிறது.

அவர் மறைந்து பல ஆண்டுகளாகியும் இப்போதும் கூட நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது என்பதை முகநூல் பக்கங்களில், அவரது பிறந்த நாள், நினைவு நாளின்போது பதிவாகும் பதிவுகள் சொல்கிறது.

பலரும் அந்த நாளில் தங்களது கனவுக்கன்னி சில்க் ஸ்மிதா பற்றிய தகவல்களை சொல்லி நினைவு கூறி இருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் 1990 இல் மிகப்பெரிய ஒரு கவர்ச்சி நாயகியாக இருந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் நடிகை ஷகீலா. இவர் முதல் படத்திலேயே சில்க் ஸ்மிதாவின் தங்கையாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஷகீலா நடித்த தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் பிட்டு படங்கள் என்று கூறப்படும், கவர்ச்சி படங்களாக தான் இருந்தன. ஆனால் இந்த படங்களை பார்க்க ரசிகர் கூட்டம் முண்டியடித்தது.

குறிப்பாக கேரளாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன்லால், மம்முட்டி படங்களை பார்ப்பதற்கு வந்த கூட்டத்தை விட, ஷகிலா படங்களை பார்க்க வந்த கூட்டம் அதிகம் என்று கூறப்படுகிறது.

அந்த அளவுக்கு ஷகீலா படங்களை திரையிட தியேட்டர் நிர்வாகங்கள் போட்டி போட்டுக் கொண்டு,அவரது படத்தை ரிலீஸ் செய்து கணிசமான லாபம் பார்த்தன என்பது உண்மை.

நடிகை ஷகீலா ஒரு பேட்டியில் கூறும் போது, என்னை ஒரு படத்தில் நடிக்க கமிட் செய்வார்கள். ஆனால் ஒரே படத்தில் நடிப்பது போல், சம்பந்தமே இல்லாமல் பல காட்சிகளை எடுத்துவிடுவார்கள். அதையே நான்கு படங்களுக்கு பயன்படுத்திக் கொண்டு, நான்கு படங்களில் நான் நடித்தது போல் காட்டி, வேறு வேறு கிளுகிளுப்பான பெயர்களை அந்த படங்களை ரிலீஸ் செய்து ஏராளமான லாபம் பார்த்து விடுவார்கள்.

ஆனால் எனக்கு ஒரு படத்தில் நடித்த சம்பளம் தான் கிடைக்கும். இப்படியெல்லாம் வாழ்க்கையில் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை ஷகிலா.

தமிழில் பல படங்களில் நடித்தாலும் கூட சின்ன சின்ன ரோல்களில் ஷகீலா நடித்திருந்தாலும், அந்த படங்களிலும் அவர் கவர்ச்சியாக தான் காட்டப்பட்டார் என்பதுதான் உண்மை.

சமீபத்தில் தனது வளர்ப்பு மகளை ஷகீலா தாக்கினார் என்று ஒரு சர்ச்சை எழுந்து, போலீஸ் வரை புகார் சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை ஷகீலா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் அவரிடம் நீங்கள் இதுவரை கர்ப்பமாக இருந்திருக்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை ஷகீலா, ஒரே ஒரு முறை கர்ப்பமாக இருந்திருக்கிறேன். சிறு வயதில் எனக்கு பீரியட்ஸ் பிரச்சனை இருக்கும். சரியான நேரத்திற்கு பீரியட்ஸ் வராது.

எட்டு மாதத்திற்கு ஒருமுறை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை இப்படித்தான் எனக்கு பீரியட்ஸ் வரும். அதனால்தான் ஒருமுறை நீண்ட நாட்களாக பீரியட்ஸ் வரவில்லை என்று, நான் தவிர்த்து விட்டேன், பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் என்னுடைய அம்மா, என்னுடைய நடவடிக்கைகள் மற்றும் உடல் மாற்றங்கள் ஆகிவற்றை கவனத்தில் கொண்டு, என்னை பரிசோதனை செய்தார். அப்போது அதிர்ச்சி அடைந்தார்.

நீ ஹாஸ்பிடலுக்கு வா என்று என்னை அழைத்துச் சென்றார். அங்கு சென்ற பிறகுதான் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்தது. அதன் பிறகு என்னுடைய கர்ப்பத்தை கலைத்தார்கள்.

இதற்கு காரணம் வேறு யாரும் கிடையாது. என்னுடைய ஆண் நண்பர் ஒருவர் தான் பேசி இருக்கிறார் நடிகை ஷகீலா.

LATEST News

Trending News

HOT GALLERIES