குடிப்பழக்கம் இருப்பதை மறைக்க நாடகம்!! ஞானவேல் ராஜா மனைவியால் புலம்பும் பணிப்பெண்ணின் மகள்..

குடிப்பழக்கம் இருப்பதை மறைக்க நாடகம்!! ஞானவேல் ராஜா மனைவியால் புலம்பும் பணிப்பெண்ணின் மகள்..

சினிமா பிரபலங்களின் வீட்டில் எது நடந்தாலும் அது பெரியலவில் பேசப்படும். அப்படிதான் சில மாதங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைத்திருந்த நகை உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போனது. இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில், இதனை தொடர்ந்து யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் வீட்டிலும் நகைக்கள் காணாமல் போனது.

தற்போது வீட்டில் இருந்த மனைவியின் நகைகள் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி மாயமானதாக கூறி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்திருக்கிறார். தன்னுடைய வீட்டில் வேலை செய்த பணிப்பெண், முன்னுக்கு பின் முரணாக பேசியதில் சந்தேகம் என்று புகாரில் கூறியிருக்கிறார். நேரில் வரவழைத்து விசாரித்ததில் நான் எடுக்கவில்லை என்று பணிப்பெண் லட்சுமி தெரிவித்தார்.

இதனையடுத்து விசாரணை முடிந்து வீடு திரும்பிய லட்சுமி, திடீரென விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவமனையில் அனுமதித்த லட்சுமியின் மகள் பரபரப்பு புகாரை அளித்திருக்கிறார்.

அவர்கள் வீட்டில் 3 பேர் வேலை பார்த்து வருகிறார்கள், என் அம்மாவை மட்டும் கூறியதில் உள்நோக்கம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் ஞானவேல் ராஜாவின் மனைவிக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் அது வெளியில் தெரியாமல் இருக்கத்தான் இப்படியான நாடகத்தை நடத்துவதாகவும் லட்சுமியின் மகள் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES