எப்புட்ரா.. இப்போ தானே கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ளயா.. பிரியங்காவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, ஏப்ரல் 16, 2025 அன்று டிஜே வசி சச்சியுடன் இரண்டாவது திருமணத்தை ரகசியமாக முடித்தார்.
இலங்கை வாழ் தமிழரசு கட்சித் தலைவர் மறைந்த இரா. சம்பந்தனின் தங்கையின் மகனான வசி, இலங்கையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஒரு நிகழ்ச்சியில் பிரியங்காவுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணத்தைத் தொடர்ந்து, பிரியங்கா தனது கணவருடன் லண்டனுக்கு தேனிலவு சென்றார்.
இதனால், ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் சில எபிசோடுகளை தொகுத்து வழங்கவில்லை; அவருக்கு பதிலாக நடிகை லட்சுமி பிரியா தொகுத்தார். இந்நிலையில், பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, “எப்புட்ரா.. இப்போ தானே கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ளயா.. என்ன ஆச்சு பிரியங்கா?” என நலம் விசாரித்து, விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வசி, தனது இன்ஸ்டாகிராமில் பிரியங்காவை குறிப்பிட்டு, “எப்போ வர்றீங்க?” என பதிவிட, பிரியங்கா, “ஐ லவ் யூ... இன்னும் சில நாட்களில் வருகிறேன்” என பதிலளித்தார்.
இது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. பிரியங்காவின் உடல்நிலை குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.