அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும்.. விவாகரத்து கிசுகிசு! செல்வராகவன் வெளியிட்ட பதிவு
ஆயிரத்தில் ஒருவர், 7ஜி ரெயின் போ காலனி, புதுப்பேட்டை போன்ற தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். இவர் தற்போது தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இயக்குநர் செல்வராகவனுக்கும் அவருடைய மனைவிக்கும் விவாகரத்து என்பது போல் பல செய்திகளை பார்க்க முடிகிறது. செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார் என்றும், அதனால் அவர்கள் விவாகரத்து செய்ய போகிறார்களா எனவும் ஒரு கிசுகிசு கடந்த சில தினங்களாக பரவி வருகிறது. ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு செய்தியும் இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், "திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா ? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள். அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகி விடும்" என பதிவிட்டுள்ளார்.
திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா ? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள்.
— selvaraghavan (@selvaraghavan) December 18, 2025
அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகி விடும்.
இதை பார்த்த நெட்டிசன்கள், செல்வராகவன் குடும்பத்தில் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.