விஜய்யால் மீண்டும் தலைவலியில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பராசக்தி படம் ரூ 90 கோடிகள் வரை வசூல் செய்தது.
இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகன் தான் பராசக்தி-யுடன் வரவிருந்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால், சென்ஸார் பிரச்சனையால் இந்த படம் சொன்ன தேதியில் வரவில்லை, தற்போது இந்த பிரச்சனைகள் மெல்ல நீங்க, படத்தை பிப்ரவரி 19ம் தேதி கொண்டு வரலாம் என படக்குழு யோசித்து வருகிறதாம்.
ஆனால், அதே நாளில் தான் சிவகார்த்திகேயன் தயாரித்த தாய்கிழவி படம் வரவிருக்க, இதென்னடா சிவகார்த்திகேயன் அவர்களுக்கு புதிய தலைவலி என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.