கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் நடிகர்

கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் நடிகர்

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர் கடன் பிரச்சனையில் சிக்கி இருக்கிறாராம். முன்னணியில் இருக்கும் நடிகர் ஒருவர் கடன் சுமையில் இருக்கிறாராம். தான் நடித்த படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்களின் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டது. சம்பளத்தை விட்டுக் கொடுத்தது என எல்லாம் சேர்ந்து பெரும் தொகை கடனாக நிற்கிறதாம். கொரோனா காலம் வராமல் போயிருந்தால் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு சமாளித்திருப்பாராம். இப்போது படங்கள் முடங்கி கிடப்பதால், கடன் வளர்ந்து நிற்கிறதாம். அவரின் இந்த நிலையை புரிந்து கொண்ட ஒரு நிறுவனம். அடுத்தடுத்து 5 படங்கள் நடித்துக் கொடுங்கள். ஒரு படத்துக்கு 15 கோடி சம்பளம் வீதம் 75 கோடியை மொத்தமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேசி இருக்கிறார்களாம். நடிகரும் தற்போதைய சூழலுக்கு இது தான் வழி என ஒப்புக்கொண்டாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES