திருமணத்திற்கு பிறகு மஞ்சள் தாலியுடன் இருக்கும் நடிகை சமந்தா.. வைரல் போட்டோ!
இந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நான்கு ஆண்டுகள் கழித்து 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய பிரிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில், நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமோருவும் சில தினங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங்க பைரவி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், திருமணத்திற்கு பின் கழுத்தில் மஞ்சள் தாலியுடன் வலம்வந்த சமந்தாவின் போட்டோ வெளியாகி ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
