ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட சமந்தா
ஹைதராபாத்தில் கடை திறப்பு விழாவிற்கு சென்ற சமந்தா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடிகை சமந்தா கடை திறப்பு விழாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டார்.
அங்கு அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் கூட்டம் அதிகமானது.

அக்கூட்டத்தில் பலர் சமந்தாவை புகைப்படம் எடுக்க முயல, ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்.
பின்னர் சமந்தாவை மீட்ட அதிகாரிகள் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர், இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நிதி அகர்வாலும் ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.