விஜயாவிடம் அடி வாங்கிய மனோஜ், சிந்தாமணிக்கு ஆட்டம் காட்டும் முத்து... சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமானது முதல் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல்.
கதையில் மனோஜை தனது வீட்டிற்கு வர வைத்து அவரை சமாதானம் செய்து ஒன்றாக வாழலாம் என ஆசைப்பட்டார் ரோஹினி.
ஆனால் வீட்டிற்கு வந்த மனோஜ் பிடிக்கொடுக்காமல் பேச ரோஹினி உன்னை ஜெயிலில் இருந்து வெளியே எடுக்க ரூ. 5 லட்சம் செலவு செய்தேன், அந்த பணத்தை கொடு விவாகரத்து கொடுக்கிறேன் என்கிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், மனோஜ் வீட்டில் தான் ரோஹினியை வீட்டிற்கு சென்று சந்தித்தது குறித்து கூறுகிறார். அவர் வீட்டில் சாப்பிட்டதையும் சொல்ல விஜயா செம கோபமாக அடிக்கிறார், திட்டுகிறார்.
பின் ரோஹினி ரூ. 5 லட்சம் கொடுத்தால் விவாகரத்து கொடுக்கிறேன் என்றார் என சொல்ல விஜயா அதை எதற்கு கொடுக்க வேண்டும் என்கிறார். அண்ணாமலை கடைசியாக ரோஹினி ரூ. 5 லட்சம் கேட்டால் அதை கொடுக்க வேண்டிய கடமை உனக்கு தான், நீ தான் கொடுக்க வேண்டும் என்கிறார்.

சத்யா முத்துவிற்கு போன் செய்து, ரேகா மெசேஜ் அனுப்பியிருக்கிறார், நாளை எனக்கு போன் செய்கிறேன் என்றிருக்கிறாள், எனக்கு பயமா இருக்கிறது என்கிறார். பின் சத்யா போன் பேசியதில் ரேகாவை திருப்பதி அழைத்துச் சென்றதை கூறுகிறார்.
அந்த விஷயத்தை கேட்ட முத்து ரேகாவிற்கு போன் செய்து மயக்கம் வந்தது போல் நடி, தண்ணீயே மூஞ்சில் உற்றினாலும் எழாதே என்கிறார். ரேகாவும் அப்படி நடிக்க அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள், அந்த விஷயம் சிந்தாமணி அவரது கணவருக்கு தெரிய வருகிறது.
ஆனால் சிந்தாமணி, முத்து கொடுத்த ஐடியாவில் தான் ரேகா இப்படி செய்துள்ளாள், மற்றபடி பிரச்சனை இருக்காது, நீங்கள் உடனே அங்கு செல்லுங்கள் என கணவரை திருப்பதி போக கூறுகிறார்.