லஞ்சம் வாங்கும் போது திடீரென வந்த லஞ்ச ஒழிப்புதுறையினர், செந்தில் சிக்குவாரா?.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்.
இன்றைய எபிசோடில், மயில் தனது அம்மாவிடம் இனி எனது வாழ்க்கை பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்கிறார்.
ஆனால் மயில் அம்மா இப்படியே விட்டால் என்ன ஆவது என கேட்க மயில் நீங்கள் எனது வாழ்க்கையில் தலையிட வேண்டாம், அப்படி இனி ஏதாவது செய்தால் மயில் இனி இந்த வீட்டில் இருக்க மாட்டாள், எங்கேயாவது சென்றுவிடுவாள் என்கிறார்.

அடுத்து சரவணன் அஞ்சலி வீட்டிற்கு சென்று அவரது அம்மா அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறார், தன்னால் இனி பிரச்சனை வராது என்கிறார். கடைசியாக மீனாவிற்கு தெரியாமல் லஞ்சம் வாங்கிவரும் செந்தில் வீட்டில் பணம் வைத்திருப்பதை மீனா பார்த்துவிடுகிறார்.
உடனே செந்திலிடம் பணம் குறித்து கேட்க அவர் ஏதோ சமாளிக்கிறார்.
புரொமோ
தற்போது வந்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புரொமோவில், செந்தில் தனது அலுவலகத்தில் வழக்கம் போல் லஞ்சம் வாங்கி கையெழுத்து போடுகிறார்.
அப்போது ஒரு கையெழுத்து போடும் போது லஞ்சப்பணம் தர டிராயரில் இடம் இல்லாததால் நீயே வைத்திரு பிறகு வாங்குகிறேன் என்கிறார்.
அந்த நேரம் பார்த்து திடீரென லஞ்ச ஒழிப்பு துறையினர் வருகிறார்கள், அவர்களின் சோதனையில் செந்தில் சிக்குவாரா அல்லது தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ புரொமோ,