சிறகடிக்க ஆசை சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா?... மனோஜாக நடிக்கும் ஸ்ரீதேவா போட்ட பதிவு
சிறகடிக்க ஆசை
இந்த சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது ரேகா-சத்யாவின் திருமண கதைக்களம் தான் பரபரப்பாக செல்கிறது.
முத்து தனது பாட்டி வீட்டில் சத்யா-ரேகாவின் திருமணத்தை கோலாகலமாக நடத்துகிறார். விஜயா, என்னை என் வீட்டில் இருந்து அனுப்பப் பார்த்த சிந்தாமணி கதறி அழுவதை நான் பார்க்க வேண்டும் என திருமணம் நடக்கும் விஷயத்தையும், இடத்தையும் கூறுகிறார்.

சிந்தாமணி தனது கணவருடன் மகள் திருமணம் நடக்க விடாமல் தடுக்க வேண்டும் என ஓடி வருவதற்குள் சத்யா ரேகா கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார். மகளுக்கு திருமணம் ஆனதை கண்ட சிந்தாமணி ஆத்திரம் அடைந்து அருவாள் எடுத்து வெட்ட வர முத்து தடுத்துவிடுகிறார்.

ரேகாவை தாலியை கழற்றிவிட்டு வா என சிந்தாமணி கூற அவர் சத்யா தான் என் கணவர் என்கிறார். ஒன்னும் இல்லாதவனுடன் ரேகாவிற்கு திருமணம் ஆனதே என சிந்தாமணி கோபமாக இருகக விஜயா வேறு நக்கலாக பேசுகிறார்.
இந்த திருமணம் முடிந்த கையோடு அடுத்து மனோஜ் மறுமண காட்சிகள் வரும் என தெரிகிறது.

கிளைமேக்ஸ்
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிறகடிக்க ஆசை சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்று கூறப்பட்டது.
அப்படி வந்த ஒரு பதிவில் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவா, சீரியல் முடிவடைகிறது என்றால் கலங்கிய கண்களோடு கனத்த குரலோடு நிச்சயம் எங்களுடைய தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஒரு வீடியோவை வெளியிடுவோம் சீரியல் நிறைவடைகிறது இத்தனை நாள் தந்த ஆதரவிற்கும் அன்பிற்கும் கோடான கோடி நன்றிகள் என தெளிவான விளக்கத்துடன் வீடியோ வரும் வரவில்லை என்றால் இன்னும் முடிவடையவில்லை என்று அர்த்தம் என பதிவிட்டுள்ளார்.
