பிக்பாஸ் டைட்டில் வின்னரை மறுமணம் செய்ய போகிறாரா நடிகை மேக்னாராஜ்?

பிக்பாஸ் டைட்டில் வின்னரை மறுமணம் செய்ய போகிறாரா நடிகை மேக்னாராஜ்?

பிக்பாஸ் டைட்டில் வின்னரை நடிகை மேக்னா ராஜ் மறுமணம் செய்யப் போவதாக பரவி வரும் வதந்தியால் கன்னட திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னட நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல நடிகருமான் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு ஜூன் 7ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது மேக்னாராஜ் கர்ப்பமாக இருந்தார் என்பதும் அதன் பின் சில மாதங்கள் கழித்து அவர் குழந்தை பெற்றுக் கொண்டார் என்பதும் தன்னுடைய குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென ஒரு சில யூடியூப் சேனல்களில் பிக்பாஸ் கன்னடம் சீசன் 4 டைட்டில் வின்னர் ப்ரீத்தம் என்பவரை மேக்னாராஜ் திருமணம் செய்யப்போவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்து அதிருப்தி அடைந்த ப்ரீத்தம், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இந்த செய்தியை தான் கடந்து விட முடிவு செய்ததாகவும் ஆனால் சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் ஒரே நாளில் அந்த வீடியோவுக்கு கிடைத்ததையடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார். பிக்பாஸ் கன்னடம் சீசன் 4 டைட்டில் வின்னர் ப்ரீத்தம் அவர்கள், சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னாராஜ் குடும்பத்தினரின் மிக நெருங்கிய நண்பர் என்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES