ஹாரிஸ் ஜெயராஜ் மீது பாய்ந்த வழக்கு!.. சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி உத்தரவு...
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 2001 -ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைத்து பிரபல இசையமைபாளராக மாறினார்.
ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 2010 -ம் ஆண்டு மசராட்டி எனும் இத்தாலி சொகுசு காரை இறக்குமதி செய்தார். இவர் அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஹாரிஸ் ஜெயராஜ்க்கு அபராதம் விதித்தார்.
அதன் பின்னர் வரியை செலுத்திய ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பு, அபராதம் விதித்ததற்கு தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இதை தொடர்ந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.