என்னை அந்த விஷயத்திற்கு மாமியார் கட்டாயப்படுத்தினார்.. ரவி மோகன் அறிக்கை! எதற்குன்னு தெரிஞ்சா ஆடி போயிடுவீங்க..!

என்னை அந்த விஷயத்திற்கு மாமியார் கட்டாயப்படுத்தினார்.. ரவி மோகன் அறிக்கை! எதற்குன்னு தெரிஞ்சா ஆடி போயிடுவீங்க..!

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

இருப்பினும், கடந்த 2024 செப்டம்பரில் ரவி மோகன், ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்து, விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ஆர்த்தி இது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு எனவும், தனது ஒப்புதல் இல்லாமல் இது நடந்ததாகவும் குற்றம் சாட்டினார். இதனால், இவர்களது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் பிரீத்தாவின் திருமணத்தில் ரவி மோகன், பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் ஜோடியாக கலந்து கொண்டார். 

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவர்களது உறவு விவாகரத்திற்கு காரணம் என ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் குற்றம்சாட்டினார். ஆர்த்தியும் இது குறித்து உணர்வுபூர்வமான அறிக்கை வெளியிட்டு, 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் தான் அளித்த அன்பு, விசுவாசம் மற்றும் நம்பிக்கையை ரவி மோகன் புறக்கணித்ததாகவும், தனது மகன்களை தவிக்க விட்டதாகவும் குற்றம் சாட்டினார். 

இதனால், இணையவாசிகள் பலரும் ரவி மோகனை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதில், ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் பல கோடி ரூபாய் கடனுக்கு உத்தரவாதம் அளிக்கும்படி தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், 10 நாட்களுக்கு முன் ஒரு படத்தில் நடிக்க வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். 

மேலும், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பம் தன்னை பண உத்தரவாதங்களுக்காக மட்டுமே பயன்படுத்தியதாகவும், 16 ஆண்டுகளாக நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்ததாகவும் தெரிவித்தார். 

தனது சொத்துகளை அவர்கள் வற்புறுத்தி பிடுங்கியதாகவும், தற்போது பொய்யான பொருளாதார நெருக்கடி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் கூறினார். 

இறுதியாக, பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு எழுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த அறிக்கை ஆர்த்தி தரப்பு மீது புதிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

இரு தரப்பு குற்றச்சாட்டுகளும் இணையத்தில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. இதனால், இவர்களது விவாகரத்து வழக்கு மேலும் சிக்கலாகி, பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

LATEST News

Trending News