வயதானவருடன் நெருக்கமாக நீலிமா ராணி.. தீயாய் பரவும் புகைப்படம்.. ஷாக் ஆன ரசிகர்கள்!

வயதானவருடன் நெருக்கமாக நீலிமா ராணி.. தீயாய் பரவும் புகைப்படம்.. ஷாக் ஆன ரசிகர்கள்!

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி, சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது மனதை புண்படுத்திய சமூக வலைதள கேள்விகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 

‘வேட்டையன்’, ‘குயின்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற நீலிமா, தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தபோது, ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். 

“நீங்கள் இவ்வளவு வயதானவருடன் நெருக்கமாக இருக்கிறீர்கள், இவர் உங்கள் தாத்தாவா, அப்பாவா?” என்று கேலியாகவும், கேவலமாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. 

இந்த கருத்துக்கள் தனது மனதை மிகவும் பாதித்ததாக நீலிமா கூறினார். ஆனால், இந்த விமர்சனங்களுக்கு தனது கணவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்று நீலிமா தெரிவித்தார். 

அவர் கூறியதாவது, “நான் விரும்பினால் முடிக்கு டை அடித்து இளமையாக தோற்றமளிக்க முடியும். ஆனால், அதற்கு என்ன அவசியம்? நான் இயற்கையாக இருப்பதைத்தான் விரும்புகிறேன். 

எனது மனைவிக்கு நான் இளமையானவன் என்பதை யாருக்கு நிரூபிக்க வேண்டும்? இயற்கையாக இருப்பதுதான் என் அடையாளம், அதை மறைக்க வேண்டிய அவசியமில்லை.” இந்த பதில் நீலிமாவுக்கு பெரும் ஆறுதலாக இருந்ததாகவும், அதன்பிறகு இதுபோன்ற மோசமான கேள்விகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். 

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கும் நீலிமா, இந்த அனுபவத்தின் மூலம் மன உறுதியுடன் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ள கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

LATEST News

Trending News