6 மாச குழந்தை கொடுமை.. ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா கைது? அதிரும் இண்டர்நெட்!
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர், ‘பிகில்’ (2019) படத்தில் நடித்து புகழ் பெற்றவர். விஜய்யின் மகளாக நடித்து கவனத்தை ஈர்த்த இந்திரஜா, திரைப்படங்களில் பெரிதாக தொடரவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
2022-ல் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், 2025 ஜனவரியில் ஆண் குழந்தை பெற்றார். இந்தக் குழந்தைக்கு நடிகர் கமல்ஹாசன் ‘நட்சத்திரன்’ எனப் பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்திரஜாவும் அவரது குடும்பமும் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பேட்டிகள், வீடியோக்கள் மூலம் ரசிகர்களுடன் இணைந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் பதிவுகள் அடிக்கடி இணையத்தில் ட்ரோல் செய்யப்படுவது வழக்கமாகி விட்டது.
சமீபத்தில், இந்திரஜா சங்கர் தனது ஆறு மாத மகன் நட்சத்திரனுக்கு மூளை வளர்ச்சிக்காக (Brain Development) சிறப்பு பயிற்சி அளிக்கும் ஒரு பள்ளியில் சேர்த்திருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த வீடியோ, ஒரு விளம்பர (ப்ரோமோஷன்) வீடியோவாக இருந்தாலும், இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், ஆறு மாத குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பயிற்சிகள் குறித்து இந்திரஜா பேசியுள்ளார், இது ‘Tickle Right’ போன்ற மூளை வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது.
இந்தத் திட்டங்கள், 6 மாதம் முதல் 7 வயது வரையிலான குழந்தைகளுக்கு புலனுணர்வு மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனையை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும், ட்ரோல்களும் எழுந்துள்ளன. எக்ஸ் தளத்தில், “6 மாச குழந்தைக்கு brain tuning training ஆம் கொஞ்சம் ஓவரா தான் போற #ரோபோசங்கர்ஃபேமிலி” என்று @im_saraahh பதிவிட்டார்.
மற்றொரு பயனர், @arcot2arctic, “இந்த ரோபோ சங்கர் மகளுக்கு வேற வேலையே இல்லையா.. 6 மாத குழந்தைகளுக்கு brain tuning என்று heguru போன்ற போலியான முறையை விளம்பரம் பண்ணிட்டு இருக்காங்க. 5 வயது வரை குழந்தையை குழந்தையாக வளர விடுங்க” என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்த விவகாரம், இன்றைய அவசர உலகில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அதன் வணிகமயமாக்கல் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மற்றவர்களை விட முன்னேற வேண்டும், ‘ஸ்பெஷல்’ ஆக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு.
இதனால், குழந்தைகளுக்கு ஆரம்பகால கல்வி மற்றும் மூளை வளர்ச்சி பயிற்சிகளுக்கு பெற்றோர்கள் இலட்சக்கணக்கில் செலவு செய்யத் தயாராக உள்ளனர். தெருவுக்கு நான்கு பிளே ஸ்கூல்கள், தனியார் பள்ளிகள், மற்றும் சிறப்பு பயிற்சி மையங்கள் முளைத்து வருவதும் இதற்கு சாட்சியாக உள்ளது.
‘Tickle Right’ போன்ற திட்டங்கள், குழந்தைகளின் ஆக்கப்பூர்வ சிந்தனை, பிரச்சினை தீர்க்கும் திறன், மற்றும் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் என விளம்பரப்படுத்தப்படுகின்றன.
ஆனால், இதுபோன்ற பயிற்சிகளின் செயல்திறன் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உதாரணமாக, NBC News இதழில், இதுபோன்ற மூளை பயிற்சி திட்டங்களின் ஆதாரங்கள் மிகவும் பலவீனமாக உள்ளதாகவும், சில பெற்றோர்கள் மட்டுமே இதில் மாற்றங்களைக் கண்டதாகக் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரஜாவின் வீடியோவைப் பார்த்து, ஒரு தரப்பு ரசிகர்கள், “குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இதுபோன்ற முயற்சிகள் நல்ல முன்மாதிரி,” என்று பாராட்டியுள்ளனர்.
ஆனால், பெரும்பாலான இணையவாசிகள், “ஆறு மாத குழந்தைக்கு இப்படி ஒரு பயிற்சி தேவையா? இது குழந்தையைக் கொடுமைப்படுத்துவது போல் இல்லையா? இந்திரஜா தவறான வழிகாட்டுகிறார்.. இவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சிலர், “இது வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே,” என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்திரஜாவின் குடும்பம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் பகிர்ந்து, ட்ரோல் செய்யப்பட்டு வருவதால், இந்த வீடியோ மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் தளத்தில், @arcot2arctic போன்ற பயனர்கள், இந்திரஜாவின் வீடியோவை ‘Heguru’ போன்ற போலி மூளை வளர்ச்சி முறைகளுடன் ஒப்பிட்டு, “குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள்,” என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ரோபோ சங்கர் மகளுக்கு வேற வேலையே இல்லையா..தினம் வாழ்க்கையை மார்கெட்டிங் பண்ணி இப்போ 6 மாத குழந்தைகளுக்கு brain tuning என்று heguru போன்ற போலியான முறையை விளம்பரம் பண்ணிட்டு இருக்காங்க.
— ModernMaverick (@arcot2arctic) June 25, 2025
5 வயது வரை குழந்தையை குழந்தையாக வளர விடுங்க. pic.twitter.com/P1PO9cVYKT