அழகான காதல் காவியத்திற்கு சுபம் போட்டாச்சு... எமோஷ்னல் காட்சிகளுடன் முடிந்த மகாநதி சீரியல்
மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் மகாநதி.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் 4 சகோதரிகளின் வாழ்க்கை கதையாக ஒளிபரப்பாகி வந்தது.
அந்த கதைக்களம் மூலமாகவே ரசிகர்களை கவர்ந்த இந்த சீரியலில் திடீரென ஒரு குடும்பம் நியூ என்ட்ரி கொடுக்க கதை இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. 4 சகோதரிகளின் கதையாக இருந்த மகாநதி சீரியல் விஜய்-காவேரி கதையாக மாறியது.
அதிலிருந்து சீரியலுக்கான ரசிகர்கள் அதிகமானார்கள், இந்த ஜோடிக்கு தமிழ் சின்னத்திரையில் நிறைய விருதுகள் கிடைத்தது.

சுபம்
கடந்த சில நாட்களாக இந்த மகாநதி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்று கேட்டதும் ரசிகர்கள் மிகவும் வருந்தினார்கள். அதேபோல் கடைசிநாள் படப்பிடிப்பிலும் நடிகர்கள் அனைவருமே மிகவும் எமோஷ்னல் ஆனார்கள், அந்த வீடியோக்கள் எல்லாம் வெளியாகி இருந்தது.
இன்று ஜுன் 26, மகாநதி சீரியலின் கடைசி எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. காவேரிக்கு பழைய நினைவுகள் எல்லாம் வர என் குழந்தை எங்கே என கேட்க அனைவரும் இன்ப அதிர்ச்சி ஆகிறார்கள்.
பிறகு அவரிடம் எல்லா உண்மைகளையும் கூற குடும்பத்தினர் செம சந்தோஷமாக விஜய்-காவேரி திருமணத்தை நடத்துகிறார்கள், அந்த சந்தோஷ காட்சிகளுடன் தொடர் முடிவுக்கு வருகிறது.