11 குழந்தைகளை பெற்றுக்கொள்ள எனக்கு ஆசை, ஆனால்... அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்
அனுபமா
மலையாள சினிமாவில் சில வருடங்களுக்கு வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஓட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
மலையாளம், தெலுங்கு என பிஸியாக நடித்துவரும் இவர் தமிழில் கொடி, டிராகன், பைசன் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றிக்கண்டுள்ளார்.
அவர் நடித்த 3 படங்களில் இரண்டு படங்கள் மெகா ஹிட் தான்.
பேட்டி
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது காதல் முறிவு குறித்து திடுக்கிடும் விஷயங்கள் நிறைய பேசியிருந்தார்.
அதில் அவர், என்னுடைய பழைய உறவில் நான் இரண்டு ஆண்டுகள் மனரீதியாக பல கொடுமைகளுக்கு ஆளானேன். அந்தக் காலகட்டத்தின் தான் உடலளவிலும் பாதிக்கப்பட்டேன், உடல் எடையை எல்லாம் குறைத்தேன். எனது இன்ஸ்டா பதிவுகளுக்கு பின்னால் இரண்டு ஆண்டு வலியும், போராட்டமும் இருக்கிறது.

நான் காதலித்த நபர் ஒருநாள் அந்நியனாகவும், ஒருநாள் ரெமோவாகவும், ஒருநாள் அம்பியாகவும் இருப்பார். காதலிக்க தொடங்கிய மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் செய்ய சொன்னார்கள். நான் நிறுத்திவிட்டேன்.
ஒரு கட்டத்தில் இவருடன் ஒத்து வராது நிரந்தரமாக பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்தேன். நான் அந்த நபருடன் உறவில் இருந்தபோது 11 குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியான குடும்பம் நடத்த ஆசைப்பட்டேன்.
ஆனால் அவரின் Narc ssistic Abuseயில் நொந்து இப்பொழுது கல்யாணமே வேண்டாம் என தோன்ற ஆரம்பித்துவிட்டது என பேசியுள்ளார்.