சீரியலில் நடிக்கப்போவதில்லையா, சிப்புவின் அதிரடி முடிவு- ரோஜா சீரியல் ரசிகர்கள் ஷாக்

சீரியலில் நடிக்கப்போவதில்லையா, சிப்புவின் அதிரடி முடிவு- ரோஜா சீரியல் ரசிகர்கள் ஷாக்

சன் தொலைக்காட்சியை முதல் இடத்தில் கடந்த சில வருடங்களாக வைத்திருக்கிறது ரோஜா சீரியல். இதன் ஆரம்பத்தில் ஒரு கதையாசிரியர் பின் இடையில் 2,3 கதையாசிரியர்கள் மாற்றப்பட்டு விட்டார்கள்.

இதனால் இடையில் சீரியல் TRPயில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது சீரியல் மீண்டும் தனது இடத்தை அதாவது முதல் இடத்தை பிடித்துவிட்டது.

கதையாசிரியரும் அண்மையில் மாற்றப்பட்டுள்ளார். இந்த சீரியல் நாயகன் சிப்பு கன்னட சினிமாவை சேர்ந்தவர். கன்னடத்தில் சீரியல்கள் நடித்த இவருக்கு குமார் என்பவர் மூலம் இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் தமிழில் பேச கஷ்டப்பட்ட இவர் தற்போது நன்றாக பேச ஆரம்பித்துவிட்டார்.

அண்மையில் ஒரு பேட்டியில் இவர், ரோஜா சீரியலோடு நான் சின்னத்திரையில் நடிப்பதை நிறுத்த போகிறேன், இதை கேட்ட அதிர்ச்சியாக தான் இருக்கும்.

ஆனால் நான் படங்களில் ஆர்வம் காட்ட விரும்புகிறேன். தமிழ் மற்றும் கன்னடத்தில் ஏற்கெனவே படங்கள் கமிட்டாகி இருக்கிறேன் என கூறியுள்ளார்.

LATEST News

Trending News