தொடர்ச்சியாக 8 மணி நேரம்.. என்னால முடியல.. கதறும் தீபிகா படுகோனே.. ஜெனிலியா பதிலடி
தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா டிசோசா. இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.
தமிழைத் தாண்டி, தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் ‘பொம்மரில்லு’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘ஜானே து யா ஜானே நா’ போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றார். பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை 2012-ல் திருமணம் செய்துகொண்ட ஜெனிலியா, ரியான் மற்றும் ரஹில் என்ற இரு மகன்களுக்கு தாயானார்.
தற்போது, அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படமான ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ஜெனிலியா அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில், “8 மணி நேரம் வேலை செய்வது கடினமானது தான், ஆனால் முடியாதது இல்லை. தாய்மார்களுக்கு இது சவாலானது, ஆனால் சமாளிக்க முடியாதது இல்லை. நான் ஒரு நாளைக்கு தொடர்ச்சியாக 8 மணி நேரம் வேலை செய்வதை தாங்குவேன்.. சில நாட்களில் 10 மணி நேரம் வேலை செய்கிறேன், சில நேரங்களில் 11 அல்லது 12 மணி நேரம் கூட ஆகும்.
இது நியாயமானது என்று நினைக்கிறேன்,” எனக் கூறினார். இந்த பேட்டி, நடிகை தீபிகா படுகோனே 8 மணி நேர படப்பிடிப்பு காரணமாக ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து விலகிய பின்னணியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜெனிலியாவின் இந்த கருத்து, தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது குறித்து பலரை சிந்திக்க வைத்துள்ளது. தாய்மையையும், தொழிலையும் ஒருங்கிணைத்து செயல்படுவது குறித்து அவர் வெளிப்படையாக பேசியது, பெண்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.