குடிபோதையில் இளம் நடிகருடன் நடிகை குஷ்பூ.. அலேக்காக தூக்கி சென்ற நடிகர்.. ரகசியம் உடைத்த பிரபலம்..

குடிபோதையில் இளம் நடிகருடன் நடிகை குஷ்பூ.. அலேக்காக தூக்கி சென்ற நடிகர்.. ரகசியம் உடைத்த பிரபலம்..

தமிழ் சினிமாவில் 80-90களில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பு, தனது பன்முகத் திறமையால் திரையுலகில் நிலைத்து, தற்போது அரசியல் மற்றும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

‘வருஷமெல்லாம் 16’, ‘சின்னத்தம்பி’ உள்ளிட்ட படங்களில் கார்த்திக், பிரபு, கமலஹாசன், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவரது புகழுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி ஆராதனை செய்தனர். சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், தயாரிப்பு என பல தளங்களில் கலக்கும் குஷ்பு, நடிகர் சுந்தர் சி-யை மணந்து இரு பெண்களுக்கு தாயாக உள்ளார்.

தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார்.இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், குஷ்பு குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை ஹோட்டல் ஒன்றில் மது போதையில் குஷ்பு தள்ளாடியபடி வந்ததாகவும், இளம் நடிகர் ஒருவர் அவரை அலேக்காக தூக்கி வந்து காரில் ஏற்றி அழைத்துச் சென்றதாகவும், இதனை தான் கண்முன் பார்த்ததாகவும் பாண்டியன் கூறியுள்ளார்.

“இப்படி இருந்த குஷ்பு இன்று தேசிய மகளிர் ஆணையத்தில் இருக்கிறார். இந்தப் பதவிக்கு அவர் தகுதியானவரா?” என கேள்வி எழுப்பி, பெண்கள் நலனுக்காக உண்மையாக பாடுபடும் ஆயிரக்கணக்கான பெண்களை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

“மறுத்தால் வழக்கு தொடரட்டும்,” என சவால் விடுத்த அவரது பேட்டி இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து குஷ்பு தரப்பில் இருந்து இதுவரை பதில் இல்லை.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தி, குஷ்புவின் பொது இமேஜ் மற்றும் அவரது பதவியின் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் ஒருவரின் கடந்த காலம் குறித்த இத்தகைய கருத்துகள், சமூகத்தில் பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது.

LATEST News

Trending News